வியாழன், 9 டிசம்பர், 2010

திங்கள், 29 நவம்பர், 2010

படித்ததில் பிடித்தது

ஒரு கவிதைக்கு ஒரு முத்தம் என்றாள் என் காதலி
100௦௦ கவிதை எழுதி வந்தேன்
ஒரு சிறிய புன்னகையோடு சொன்னாள்
முட்டாள் காதலா 100 ஹய்கு கவிதைக்கு பதில்
ஒரே ஒரு நீண்ட கவிதை எழுதி இருக்கலாமே என்றாள்

எங்கோ படித்தது

பார்வை

ஒருவரை நாம் நல்லவராக பார்த்துவிட்டால்
அவர் என்ன கெடுதல் செய்தாலும் அவர் நல்லவரே
உதாரணம் ஒரு தாயின் பார்வை.
அதேபோல்
ஒருவரை நாம் கெட்டவராக பார்த்துவிட்டால்
அவர் என்ன நல்லது செய்தாலும் அவர் கெட்டவரே
உதாரணம் ஒரு காதலியின் பார்வை.

திங்கள், 22 நவம்பர், 2010

இன்றைய தலைமுறையின் காதல்

ஒரு பக்க காதல் கடிதம் எழுத, 10 பக்கம் கிழித்து எறிந்து, கடைசியில் எதுவும் எழுதாமல்
திக்கி திணறி, முக்கி முனகி நேரில் காதலை சொல்லும்போது ஒரு பட படப்பு வருமே
ஆஹா அதுவல்லவோ காதல்,
30 ௦நிமிடம் அவள் முகம் பார்த்து பேச 3 மணி நேரம் கல்லூரி வாசலில் காத்திருப்போம்
அவள் அண்ணனோடு கோயில் செல்கையில் 3 வினாடியில் 30௦ முகபாவங்களை அவள் கண்கள் பேசும்.
கடற்கரையில் கை பிடித்து நடந்து, படகு மறைவில் கண்ணியமாய் காதல் செய்து,
அவளின் செல்ல சிணுங்கல்களை இதயத்தில் சேமித்து வீடு திரும்ப எத்தனிக்கையில்
இருவரின் கண்களிலும் ஒரு சோகம் குடிகொள்ளும் ஏதோ இதுவே கடைசி என்பது போல.
அது சரி அதுதானே காதல்.
இன்றைய தலைமுறையின் காதல் எப்படி இருக்கிறது?
facebook ல் ஹாய் சொல்லி orkut ல் ஆசை வளர்த்து email ல் காதல் சொல்லி SMS ல் செய்தி சொல்லி
cellphone க்கு முத்தம் குடுத்து வளர்கிறது காதல்.
webcam ல் முகம் பார்த்து பறக்கும் முத்தம் குடுத்தால் எப்படி வளரும் தெய்வீக காதல்.
முதல் நாள் meeting , அடுத்த நாள் Dating மூன்றாம் நாள் wedding நான்காம் நாள் cutting .
இதற்கு பெயரா காதல் ? இதற்கு பெயர் காதல் அல்ல..............

செவ்வாய், 16 நவம்பர், 2010

தமிழ்

கொஞ்ச நாட்களாகவே எல்லோரும் தமிழ் வளர்ப்பதை பற்றி பேசுகிறார்கள்.
அதற்க்கு உதாரணமாக தமிழிலில் சினிமா பட பெயர் வைப்பதும், கடைகளுக்கு தமிழிலில் பெயர் பலகை வைப்பதுமாய் தமிழ் வளர்க்கிறார்கள். உண்மையை சொன்னால் செம்மொழி மாநாடு நடத்தி தமிழை வளர்க்கவேண்டாம் ஏனனில் தமிழ் விதை அல்ல, அது வேரூன்றி, விழுது விட்டு விருட்சமாய், கம்பீரமாய், விசலாமாய் இருக்கும் நம் மொழி. அதை யாரும் வளர்க்க வேண்டாம் இருப்பதை சிதைக்காமல் இருந்தாலே உத்தமம்.

செவ்வாய், 26 அக்டோபர், 2010

ஏழ்மை

நேற்று என்னுடைய நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்தித்தேன் பேச்சு வாக்கில் அவர் சொன்னார் தான் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதாய். நான் சற்றே அதிர்ந்து போனேன், ஏனனில் அவர் மிகவும் செல்வாக்கு உள்ளவர். பிறகு சொன்னார் அவருடன் பணி புரியும் சக தோழர்கள் அவரை விடவும் அதிகமாக சம்பாதிப்பதாகவும் தனக்கு குறைவாக உள்ளதாகவும். அவருக்கு ஒரு கோடி மதிப்புள்ள ஒரு வீடு உண்டு, வங்கி கணக்கில் எப்பொழுதும் பணம் இருந்து கொண்டே இருக்கும். இப்படி இருந்தும் அவர் ஏழ்மை என்கிறார். நான் என்றைக்கும் யாரையும் ஒப்பிட்டு பார்பதில்லை என்ற கொள்கை உடையவன். அன்று என்னை நானே ஒரு சிறிய ஒப்பீடு செய்தேன்.
அதிகமில்லை ஒரு 15 வருடங்களுக்கு முன்பு ஒரு வேலை உணவு கூட உண்ண வழி இல்லாமல், உடுத்த நல்ல உடை இல்லாமல், உறங்க இடம் இல்லாமல் தவித்த காலம் அது. கல்லூரி படிப்பை முடித்து மேல் படிப்பு படிக்க வழி இல்லை என்று நான் அழுத காலம் அது. நிச்சயம் செய்த மாமன் மகள் என்னை வெறுத்தொருக்கி, சொந்தங்கள் எல்லாம் ஏளன படுத்தி, மனதால் நொறுங்கி இருந்த காலம். அன்று எனக்கு என்னவெல்லாம் கிடைக்கவில்லையோ இன்று சற்று அதிகமாகவே கிடைத்துள்ளது. ஆம், இன்று எனக்கு மட்டும் இல்லாமல் பசி என்று வருபவர்க்கு என்னால் உணவளிக்க முடிகிறது, நல்ல உடை அணிகிறேன், நல்ல வீடு உள்ளது , அழகான மனைவி அறிவான பிள்ளைகள், கை நிறைய என்று சொல்வதை விட மனம் நிறைந்த சம்பளம் வேறென்ன குறை எனக்கு. திருமணம் முடிந்து சில வருடங்கள் என் மனைவிக்கு பிள்ளை பேறு தள்ளி சென்றது அதற்கு பிறகு அதை ஈடு செய்யும் வகையில் இரட்டை பிள்ளைகள் பிறந்தன. நான் கேட்பதை விட எனக்கு எல்லாமே அதிகமாகத்தான் கிடைத்து வருகிறது. இது தானே ஒரு மனிதனுக்கு தேவை. கார், பங்களா எல்லாம் வாழ்கையில் ஆடம்பரம் தானே தவிர அதுவே ஆதாரம் இல்லை. இவை அனைத்தையும் யோசித்து பார்க்கும்பொழுது என் நண்பர் உண்மையில் ஏழ்மை நிலையில் தான் உள்ளார். இனி நீங்கள் யோசித்து பாருங்கள் நீங்கள் ஏழ்மையில் தவிக்கிறீர்களா இல்லை செல்வ செழிப்போடு உள்ளீர்களா என்று. நன்றி !!

திங்கள், 25 அக்டோபர், 2010

எங்க ஏரியா உள்ள வராதே !!

தலைப்பில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளை நம்மில் பலர் கேட்டு இருக்க கூடும்.
அதுவும் குறிப்பாக சென்னைவாசிகளில் பலர் கண்டிப்பாக கேட்டு இருப்பார்கள்.
இதற்கு உண்மையிலேயே என்னதான் அர்த்தம் என்று யோசித்து பார்த்தால், ஒருவரை அவர் வசிக்கும் பகுதியிலேயே வேறு ஒரு புதிய மனிதர் சண்டை போட்டாலோ இல்லை தான் அவனை விட பெரியவர் என்று காட்டிகொண்டாலோ இந்த வார்த்தையை நாம் கேட்கலாம். உண்மையை சொல்லப்போனால் இந்த வார்த்தையை சொல்லுபவர்கள் வெட்கப்பட வேண்டும் ஏன் என்றால் இவ்வார்த்தைக்கு அர்த்தம் பார்த்தால், இது எங்க ஏரியா இங்க என்னை எதுவும் செய்ய முடியாது என்னிடம் வாய்ச்சண்டையோ, கைச்சண்டையோ போட்டால் என்னால் உன்னை எதிர்த்து போராட முடியவில்லை என்றாலும் நான் வசிக்கும் இடத்தை சேர்ந்தவர்கள் ஒரு கூட்டமாகவே வந்து எனக்கு துணையாக உன்னிடம் சண்டை போடுவார்கள் என்று தானே அர்த்தம். அப்படி என்றால் இந்த வார்த்தை சொல்பவன் ஒரு கோழை தானே. உண்மையில் ஒருவன் உங்க ஏரியா உள்ளேயே வந்து உன்கிட்ட எதிர்த்து நிக்குறான் அப்படீனா அவன் தான் வீரன். என்ன சொல்லுறீங்க ????

செவ்வாய், 12 அக்டோபர், 2010

பிரிவு

நீ பிரிந்து செல்கிறாய்
இது நிரந்தர பிரிவு அல்ல
என்று தெரிந்தும்
என்னால் நிலைகொள்ள முடியவில்லை
இன்னும் இரண்டு நாட்கள்
என்று நினைக்கும்பொழுது
என் இரு கண்களை மூட முடியவில்லை
இருதயம் தன் சக்தியை மீறி துடிக்கிறது.
மரணத்தேதியை எதிர்பார்த்து காத்திருக்கும்
தூக்கு தண்டனை கைதியை போல் ஒரு உணர்வு.
இது காதல் அல்ல , காமம் அல்ல அப்படியெனில்
இதற்கு பெயர் தான் நட்பா?
இதுதான் நட்பென்றால் இனி எனக்கு அது வேண்டாம்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால்
சத்தியமாக என்னால் முடியவில்லை.
எதாவது ஒரு அற்புதம் நடந்து
இவர்கள் இங்கேயே இருந்துவிட கூடாதா
என்று என் மனம் ஏங்குகிறது.
சந்தோஷம், துக்கம், கோவம்,
வெறுப்பு என அனைத்தையும்
ஒன்றாக பகிர்ந்த நீங்கள்
பிரிவை மட்டும் எனக்கு கொடுத்துவிட்டு
செல்வது எந்த விதத்தில் நியாயம் ????

வெள்ளி, 8 அக்டோபர், 2010

இந்திரன்

துப்பாக்கியை தூக்கி போட்டு விட்டு
துப்பட்டாவை தூக்குங்கள்
துப்பட்டாவை மட்டுமே !!

புதன், 6 அக்டோபர், 2010

ஆர்த்தி

ஆர்த்தி
இவள் பெயரில் மட்டுமே தீ
இவள் பேச்சில் இருக்காது
என் உயிர் தோழி
கட கட வென பேசும்
ஒரு கபடம் இல்லா பெண்.
சில நேரங்களில் தோன்றும்,
இவளே ஒரு குழந்தை
இவளுக்கு ஒரு குழந்தையா என்று .
என்னை நல் வழி படுத்த
முயற்சிக்கும் ஒரு மூதாட்டி.
இவள் ஆசை பட்டதை அடைந்தவள்
ஆனால், அந்த ஆசையினாலேயே
பல ஆசாபாசங்களை இழந்தவள்
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால்
இவளை என்னுடைய மகளாய் பார்க்க ஆசை.

ப்ரியம்

பிரியத்தின் அருமை அது
பிரியும் போதுதான்
புரியும்

புதன், 29 செப்டம்பர், 2010

என் உடன் பிறவா சகோதரி

ஜெசிந்தா
என் உடன் பிறவா சகோதரி
இவளை பற்றி சொல்ல
எனக்கு ஒரு வரி போதும்.
"60௦ கிலோ அன்பு " அதுதான் ஜெஸ்ஸி!
நீட்டி முழக்கி சொல்ல வேண்டும் என்றால்
தமிழின் மொத்த எழுத்துக்களும் பத்தாது.
நீயும் பிரிந்து செல்கிறாய் என்பதை
நினைக்கும்போதே இதயம் கனக்கிறது.
வாழ்த்துக்கள் !! வாழ்க வளமுடன். !!!

என் முதல் பெண் தோழி

பிரியா!!
எனக்கு கிடைத்த முதல் பெண் தோழி.
கோவம், திமிர்,
அன்பு, உரிமை,
வெறுப்பு, சோகம்,
பயம், ஆணவம்
இது அனைத்தும் ஒரு நொடியில் வெளிப்படுத்தும் ஒரு நல்ல உள்ளம்.
சில நேரங்களில் நல்ல தோழியாகவும்,
பல நேரங்களில் ஒரு உடன்பிறப்பாகவும்,
ஆலோசகராகவும்,
என்னை ஆட்டி படைத்த ௦ 62 கிலோ பிசாசு.
நீ இருந்தவரை எனக்கு ஒன்றும் தெரியவில்லை
போகிறாய் என்று நினைக்கும் போது
ஒன்றுமே புரியவில்லை.
புதிய வேலையில் சிறந்து விளங்க
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நான்

கண்ணாடி எதன் மீது மோதினாலும்
சேதாரம் அதற்குதான்
அது போலவே
நான் யாருடன் பழகினாலும்
கடைசியில் தனித்து போய் விடுகிறேன்.

புதன், 22 செப்டம்பர், 2010

கண்ணீர் அஞ்சலி

என் மரணத்திற்கு
நானே கண்ணீர் அஞ்சலி
எழுதிக்கொடுத்தேன் !
காதலியின் திருமணத்திற்கு
அழைப்பிதழ் எழுதியது நான் தானே !!

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

இங்கேயும் சில விதிகள்

முதலிரவு அறைக்குள் செல்லும் மகனுக்கு
r .t .o அப்பா ஆசியுடன் அறிவுரை சொன்னார்
மகனே "வளைவில் முந்தாதே"
இரவு ஆடிய களைப்பை போக்க
குளிக்க செல்லும் மனைவியை
பார்த்து கணவன் சொன்னான்
குளித்து விட்டு "திரும்பும் போது சிக்னல் செய்" !!

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

மாதுவின் மது

அன்று !
மது பழக்கத்தை விட சொல்லி மன்றாடினாள்
என் காதலி
அவளுக்கு தெரியுமா
அவள் தந்த ஒவ்வொரு
முத்தத்திலும் நான் மது அருந்தி
மயக்கமுற்றேன் என்று.
இன்று !!
மது பழக்கத்தை மறக்க சொல்லுகின்றாள்
என் முன்னால் காதலி
அவளுக்கு தெரியாமலா இருக்கும்
இதற்கு காரணம் அவள் மட்டுமே என்று.

பெண் பூக்கள்

காதலனை உதறிவிட்டு
மற்றவனை கைப்பிடிக்கும்
கன்னியரை காணும்போதெல்லாம் ஏனோ,
காம்பை உதறிவிட்டு
நாரோடு கோர்த்திருக்கும் பூக்கள் மட்டுமே
ஞாபகம் வருகிறது,
நார் உதிர்த்துவிடும்போது
பூ உதிர்ந்தே போகும் ஆனால்,
காம்பு அங்கே காத்திருக்கும்
மேலும் சில பூக்களை பிரசவிக்க!!

இரும்பிலே ஒரு இருதயம்...

என் வாழ்வின் மந்திரமாக நீ இருந்தாய்,
உன் பிரிவால் நான் எந்திரமாகி போனேன்
இரும்பில் இதயம் படைத்த
எந்திரனுக்கும் காதல் முளைக்கிறது
காதலிக்கும் பெண்கள் அனைவருக்கும் ஏனோ
இதயம் இரும்பாகவே இருக்கிறது ?

வியாழன், 9 செப்டம்பர், 2010

முன்னால் காதலி

அன்றொரு நாள்
மெல்லிய மழைதூறளில்
முழுவதுமாய் நனைந்து வந்துகொண்டிருந்தேன்.
முழு நிலவாய் நீ
கணினியின் உதவியோடு
காதல் சொன்னாய் என்னிடத்தில்.
மெல்லிய தூறல்
பேய் மழையை பெய்தது
என் நெஞ்சில்.
உன்னிடத்தில் காதல் வளர்த்து
என்னிடத்தில் கனவு வளர்த்தேன்
உனக்கு திருமணம் என்று பத்திரிக்கை வைத்தாய்
வெப்ப பூமியில் வியர்வை சிந்தும் மனிதனை
நெருப்பு சாட்டையால் அடித்து பிய்ப்பது போல்
என் இதயத்தை உன் வார்த்தை சாட்டையால்
ரணப்படுத்தி போனாய்.
ரணப்பட்ட என் இதயம்
மரணப்படுக்கையில் கடைசி நேரத்தில் இருக்கையில்
வந்தாள் என் அருமை முன்னாள் காதலி
கை தூக்க வந்தாள் என்றிருந்தேன்
ஆனால் அவள் பாலூற்றி அல்லவா சென்றாள்!!!




துணிவு

உன் இதயம் வரை வரதுணிந்த என் காதலுக்கு உன் வீட்டு வாசலுக்கு மேல் வரதுணிவில்லாமல் நின்று விட்டது
நீ விட்டு செல்லும் செருப்பை போலவே !!

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

தோல்வி....

அன்றொரு நாள் நீண்ட இரவினில்
நீங்காத நினைவுகளோடு
நித்திரை கொள்ள முயற்சித்து
தோற்றுபோய் கொண்டிருந்தேன்
எனை மறந்து கண் அசரும் நேரத்தில்
என்னை பெயர் சொல்லி அழைத்தது யார் ? நீயா?
சட்டென தூக்கம் களைந்து எழுந்தேன்
அங்கே வெறுமை மட்டுமே எனை ஆட்கொண்டது.
மீண்டும் முயற்சிக்குறேன்
தூங்க அல்ல
உன் நினைவுகளை துறக்க
அதிலும் தோற்றுபோய்கொண்டே இருக்கிறேன்.

கணக்கு....

1 +1 = 2 இது கணக்கு
1 +1 = 1 இது காதல்
1 +1 = 2 இது காமம்
1 +1 = 3 இது வாரிசு
1 +1 = 4 இது மச்சினிச்சி
ஹி ஹி சும்மா சொன்னேன்

நான்?????

நான் என்ன உன் வீட்டு வாசலில் தேங்கி இருக்கும் சாக்கடையா?
என்னை பார்த்ததும் ஒதுங்கி செல்கிறாய்.
உடம்பில் அடிப்பட்டு உதிரம் கொட்டும்போதும்
வராத ஓர் வலி
உன் ஓர விழிப்பார்வை என் மேல் படாத போது
உயிரே போகும் அளவுக்கு வலிக்குதடி
வீட்டு நாய்குட்டிக்கு
உன் மடி மீது இடம் இருக்கு
உன் பின்னால் நாய்க்குட்டியாய் நான்,
உன் மனதின் ஓரத்தில் ஓர் இடம் இல்லையா?

கனவுகள்

என் வாழ்வில்
கண் மூடி நான் கண்ட கனவுகளை விட
நீ வந்த பிறகு
கண் திறந்தே கண்ட கனவுகள் தான் அதிகம்.
அதன் கருவும் நீதான்
அதில் வரும் உருவும் நீதான்.

அமாவாசைக்காக....

வானத்து தேவதையின்
மார்புக்கச்சையாய் தேய்பிறை இருக்க
அவளை சுற்றி
கண்சிமிட்டி காத்திருக்கின்றன
நட்சத்திர ராஜாக்கள், அமாவாசைக்காக !!

பெண்

மேலோகத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன்
இவர்களின் பணி படைத்தல், காத்தல், அழித்தல்.
இந்த மூன்றையும் ஒருத்தல்
பூலோகத்தில் பெண் !

நீ

சில காலம் நான் கவிதை எழுதுவதை விட்டுவிட்டேன்
நீயே என் கவியாய் ஆனதிலிருந்து,
இதோ மீண்டும் எழுத ஆரம்பித்து இருக்கிறேன்
நீ என்னை காதல் பெயரால் காவி கட்ட வைத்ததிலிருந்து !!

காதல் ஆத்திசூடி

அன்பாய் இருந்தாள்
தரவாய் பேசினாள்
இயன்றதை கொடுத்தாள்
ஈன்றவளைப்போல் உரிமை எடுத்தாள்
உயிராய் அவள் இருந்தாள்
ஊதக்காற்றில் மறைந்து சென்றாள்
எங்கே என்று தேடிச்சென்றேன்
ஏன் என் பின் வருகிறாய் என்றாள்
ஐயத்தோடு கேட்டேன் காதல் இல்லையா என்று,
ஒன்றுமில்லை உன்னிடத்தில்
ஓடிப்போ என்றாள்,
ஔவையின் பொன்மொழி நினைவுக்கு வந்தது
மக்கு ஆண் மகனுக்கு அறிவு வந்தது.




வியாழன், 2 செப்டம்பர், 2010

அழகி

முகம் அவலட்சணமாக உள்ளதென்று
பெண் தற்கொலை செய்து கொண்டாள்.
அடுத்த நான் பத்திரிகையில் செய்தி
அழகி தற்கொலை

காமம்

ஏதோ கதை படித்துகொண்டிருகும்போது மனதில் தோன்றியது
காமம் என்பது நிர்வாணம் பார்த்து வருவதில்லை என்று,
நேற்று காலை தினத்தந்தியில் அழகி கொலை என்று படத்துடன் செய்தி
நிர்வாண கோலத்தில் பெண்ணொருத்தி கழுத்து அறுபட்டு கிடந்தாள்
அதை பார்த்தபோது மனதில் யாரோ இவள் பாவம், இவளை வீட்டில் காணமல்
எப்படி தேடிக்கொண்டிருகிறார்களோ, இவளை நம்பி எத்தனை பேரோ
இப்படித்தான் மனம் நினைத்ததே தவிர
என் பார்வையில் மட்டும் அல்ல மனத்திலும் இல்லை காமம்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

மாமு

மாமு சாப்பிட்டியா?
மாமு தூங்கலையா?
மாமு வேலைக்கு போகலையா?
உம்மா மாமு...
இப்படித்தான் என்னவள் எனை அழைப்பால்.....
இன்று மாமு இல்லை
ஒரு வார்த்தை கூட பேசாமல்
என்னை வதைக்கிறாள் !!

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

என்றும் இருக்கும்

ஆடிய காலும்
பாடிய வாயும்
சும்மா இருக்காது என்று சொல்வார்கள்
அதே போல்
காதலித்த இதயமும்
சும்மா இருக்காது
என்றும் அழுதுகொண்டே இருக்கும்
எங்கோ ஏமாற்றிசென்ற காதலியை நினைத்து!

கண்ணீர் துளி !!

உன் கண்களை பார்த்தபோது வரவில்லை,
உன் கழுத்துக்கு கீழே பார்க்கும்போதும் வராத காதல்
ஏனோ, உன் கணவனோடு நீ செல்கையில் வருகிறதடி
காதல் அல்ல, கண்களின் ஓரம் ஒரு கண்ணீர் துளி.

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

மரியாதை....

சாமியின் தேரில் இருந்து உதிரும் பூவுக்கான மரியாதை
சாவு ஊர்வலத்தில் கிடக்கும் பூக்களுக்கு கிடைப்பதில்லை
அது போன்றே
சாப்ட்வேர் மாப்பிள்ளைக்கு கிடைக்கும் மரியாதை
சப்போர்ட் டீம் மாப்பிள்ளைக்கு கிடைப்பதில்லை.

காதல்

தன் உள்ளங்கையில் முத்தமிட்டு
உதடு குவித்து சத்தமிட்டு
கண்களை சிமிட்டி பிடித்துகொள்
பறக்கும் முத்தம் என்றாய்
இன்று
என் உள்ளத்தில் குத்திவிட்டு
உணர்சிகளை கொன்றுவிட்டு
பறந்ததடா காதல் என்றாய்
பறந்தது காதல்
மறந்தது நீ
இறந்தது நான்.

திருப்பிக்கொடு

காதலித்த இதயத்தை திருப்பி கொடு என்றாய்
நான் கொடுத்த முத்தங்களை திருப்பி கொடுப்பாயா ?

நிலா

என் நாட்டில் மட்டும் மூன்று நிலாக்கள்
ஒன்று வானில்
இரண்டு உன் கண்களில்.

குயில்

முதன் முதலில் என் பின்னால் இருந்து நீ அழைக்கையில்
ஆச்சர்யத்தோடு திரும்பினேன்
குயில் கூவும் என்று தெரியும்
பேசும் என்று தெரியாது
அதுவும் என் பெயர் சொல்லி அழைத்தபோது
தெரிந்து கொண்டேன் குயில் பேசும் என்று.

புதன், 18 ஆகஸ்ட், 2010

நிறம்

நான் கறுப்பென்பதால்
உன் கண்கள் எனை பார்க்க மறுக்கிறதா?
பெண்ணே நினைவுகொள்
என்னை பார்க்க மறுக்கும்
உன் விழியும் கருப்புதான் !!

சிறை

என்னை உன் இதயச்சிறையில் அடைத்து வை என்றேன்
அனால் நீயோ...
ஈவ் டீசிங் என்ற பெயரில்
மத்திய சிறையில் அடைத்துவிட்டாய் !

நீ...

நிலா, வானம், மேகம் , கடல்,
கடற்கரை, மழை, குதிரை , தாமரை,
பஸ்ஸில் பயணிக்கும்போது
ஜன்னலோரத்தில் மழைச்சாரல்
இது அனைத்தும் அழகாய் இருந்தன
உன்னை பார்க்கும் வரை !!

நம்பிக்கை

உன் பிரிவால் நான்
விரக்தியின் விளிம்பில் அமர்ந்து
மரணத்தின் பள்ளத்தாக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்
என்றாவது நீ வருவாய் என்ற ஒரு
குருட்டு நம்பிக்கையில்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

சன் டிவி காதல்

காதலிக்கும் போது
வார்த்தை விளையாட்டு மிகவும் பிடிக்கும் என்றவள்..
இன்று என் வாழ்கையை விளையாட்டாய் ஆக்கிவிட்டாள்.
சப்தஸ்வரங்கள் பார்த்து பாடியவள்
என்னை, ஈனஸ்வரத்தில் பாடவைத்துவிட்டாள்.
என் வாழ்க்கை இன்று மர்ம தேசமாய் மாறிவிட்டதடி
மந்திரவாசலை நீ திறந்து
என் வாழ்க்கை சிறக்க வருவாயா?

உவமை....

வீரம் என்றால் சிங்கம் என்றும்,
நன்றி என்றால் நாய் என்றும்,
மானம் என்றால் மான் என்றும் சொன்னீர்களே
இதோ அவ்வரிசையில்
ஏமாற்றுக்காரி என்றால் என்னவளின் பெயரையும்
சேர்த்துகொள்ளுங்கள் !!

கொள்ளி

கரை தெரியாமல் தத்தளிக்கும் கப்பல் போல இருந்த எனக்கு
கலங்கரை விளக்காய் நீ வந்தாய்
கண் தெரியாமல் ரோட்டை கடக்கும்
ஒரு குருட்டு பிச்சைக்காரனாய் நானிருந்தேன்
என் கண்களுக்குள் ஒரு ஒளிபிழம்பாய் நீ வந்தாய்
ஆனால்,
நெருங்கி பார்க்கும்போது தான் தெரிந்தது
நீ ஒளிப்பிழம்பள்ள
என்னுள் ஏற்படுத்தும் ஒரு வலித்தழும்பு என்று
நீ கலங்கரை விளக்கல்ல
என் சிதைக்கு வைக்கும் கொள்ளி!!

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

மரணித்து போகிறேன்...

ஏ புலவா!
வாடிய பூக்களை பார்க்கும்போதெல்லாம்
வாடிப்போனேன் என்றாயடா !!
என்னவளை
இன்னொருவனின் மனைவியாய் பார்க்கும்போதெல்லாம்
நான் மரித்தே போகிறேன் !!!

உன் பாதங்கள்...

என் கவிஞன் சொன்னான் :
உன் பாதங்கள் மண் மீது நடக்க வேண்டியவை அல்ல ....
மலர்களின் மீதென்று
ஆனால் நான் :
அந்த மலர்களில் இருக்கும் முற்கள்
உன் பாதங்களை பதம் பார்த்துவிடுமோ என்றெண்ணி
என் இதயத்தை தரையக்கி
அதன் மீது உன்னை நடக்க வைத்தேன்
ஆனால் உன் கால்களே இன்று முள்ளாகி
என் இதயத்தை அல்லவா கிழித்தது!!

பாரதீ

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழிப்போம் என்றாயே என் பாரதி
இன்று
ஒரு நாட்டையே அழித்து
என் இனத்தவரை
பட்டினியால் சாகடித்து கொண்டிருகிறார்களே
எதை அழிக்க போகிறாய் நீ?

மஹாத்மா...

ஊர் பெயரில் இருந்தது
அவரின் போராட்டத்தில் இல்லை....

புதன், 11 ஆகஸ்ட், 2010

நானும் ஒரு கர்ணன் தான்!!

எல்லோராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ளேன்
என் தாயை தவிர.
என் தாயின் கருவறையில் இருந்த நிம்மதி
அவள் கல்லறை போனபின்
என் தாய் மட்டுமல்ல என் நிம்மதியும் இல்லை.
மனைவி வந்தபின் மாற்றம் வருமாம்
வரவில்லை போனது ,
நிம்மதி மட்டுமல்லாமல்
மன அமைதியும்
தோழி ஒருத்தி, தோல் கொடுத்தாள்,
தலை மீது அமர்ந்தாள்,
மூளையை ஊருவி போட்டு மன்னித்துகொள் என்றாள்.
நிம்மதி, அமைதி, சந்தோஷம் அனைத்தும் இழந்து
நிராயுதபாணியாய் நிற்கிறேன்.
கர்ணனை போலே அனைத்தும் குடுத்து
உயிர் மட்டும் மிச்சம் வைத்துள்ளேன்
இன்னும் யாரேனும் உண்டா
என்னிடம் மிச்சம் இருக்கும் உயிரை பிரிப்பதற்கு !!

இன்று மிகவும் மனவருத்தப்பட்டு எழுதியது இது

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

குழப்பம்

காமம் என்றேன் அது காதல் என்றாய்..
காதல் என்றேன் இது காமம் என்கிறாய்.
உனக்கு நான் என்றேன்
எனக்கு நீ என்றாய்
இன்று உனக்கு நான் என்றேன்
எனக்கு வேறொருவன் என்கிறாய்.....

ஊர்வலம்

ஊர்கோடியில் என்னை நிறுத்தி விட்டு
வேறொருவனுடன் மணகோலத்தில் ஊர்வலம் போகிறாயா?
அது சரி,
அவனை எப்போது தெருக்கோடியில் நிருத்தப்போகிறாய் ??

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

ஊமை காதலன்

சில நேரங்களில் தூரத்தில் இருக்கும் போதுதான் பல விஷயங்கள் அழகு
நிலா, வானம், மேகம் போல....
நான் உன்னை விட்டு செல்லவில்லை
சற்றே ஒதுங்கி செல்கிறேன்
தன் குழந்தையின் படிப்பை
வகுப்பறையின் ஜன்னலோரத்தில் எட்டி பார்த்து மகிழும் ஒரு ஏழை பெற்றோரை போல
உன் மகிழ்ச்சியான வாழ்கையை என்றும் நான் பார்த்திருப்பேன் ஒரு ஊமை காதலனாய் !!

கள்ளகாதல்

ஓ மனிதர்களே,
பிறன்மனை நோக்கும் பழக்கத்தை கள்ளகாதல்
என்று சொல்லாதீர்கள்,
ஏனனில், காதல் என்பது சுத்தமானது,
அதில் கள்ளம் கிடையாது.
வேண்டுமானால் கள்ளகாமம் என்று சொல்லிகொள்ளுங்கள்.

அம்மா

என்னை பத்து மாதம் சுமந்தவள் மறைந்து
நாளையோடு பதினொரு வருடங்கள்.
கருத்தாய் என்னை கருவறையில் காத்தவள்
இன்று கல்லறையில் உறங்குகிறாள்
அம்மா, உன் நினைவுகள் என்றும் இனிமையானவை,
உன்னை நினைக்கையில் இன்றும் என் கண்ணில் நீர்த்துளி

வெள்ளி, 30 ஜூலை, 2010

வகை

பேதை, பெதும்பை, அறிவை, தெரிவை , மங்கை, மடந்தை, பேரிளம்பெண்
என்று ஏழு வகையாக பெண்ணை வகை படுத்தி சொன்னவனே,
அவளின் மனதையும் வகை பிரித்து வைத்து இருந்தால் நாங்களாவது பிழைதிருப்போமே!!

என் தோழி

உன் பெயரில் உள்ளது என்பதற்காக
இப்படியா கொட்டி பேசுவது??

தொலைந்தவை....

கூகுள் தேடுதல் எதையும் தேடி தருமாமே ?
எங்கே என் தொலைந்த இதயத்தை தேடிதரச்சொல் !
தமிழக காவல் துறைக்கு உலகத்தில் சிறந்த இரண்டாவது இடமாமே ??
எங்கே என் காணமல் போன காதலை கண்டுபிடித்து தரச்சொல் !!

புதன், 28 ஜூலை, 2010

ஆதித்யா

கைகள் குறுக்கி கால்கள் சுருக்கி
பெட்டிக்குள் இருந்த அந்த மழலைப்பிஞ்சை பாத்தபோது
தாயின் கருவில் இருக்கும் ஒரு குழந்தையை போன்றே இருந்தது.
என் மனதுக்குள் ஆயிரம் கேள்வி
ஆதித்யா! என்ன நினைத்தாய் ???
"அப்பா, நீ அம்மாவிடம் செய்த பிழை நான் பிறந்தேன்
இவளோடு நீ செய்த தவறு, நான் இறந்துகொண்டிருகிறேன்".

என்ன நினைத்தாய் என் செல்வமே ??

பூவரசி.....

ஆதவனை பார்த்தே சில பூக்கள் மலரும்
ஆனால், இங்கோ
பூக்களின் அரசி ஒரு சூரியக்குழந்தையை சுட்டு ,சுருக்கி
அஸ்தமிக்க வைத்து விட்டாள்.
பெண் என்பவள் பூக்களை விடவும்
மென்மையானவர்கள் என்று தானே உவமை சொன்னோம்
ஆனால் நீ, பூவை பெயரில் வைத்து,
மனதில் வஞ்சம் வைத்தாய்
ஒரு பிஞ்சை கசக்கி விட்டாய்.
எனக்காக ஒரு வேலை செய், தயவு செய்து
உன் நடவடிக்கை மட்டும் அல்ல
உன் பெயரையும் மாற்றிகொள்.

செவ்வாய், 27 ஜூலை, 2010

காதலித்து பார்

மின்னலின் ஒளி கீற்றை காணவேண்டுமா?
உன்னவளின் கண் அசைவை நேரில் பார்....
பூ இதழின் ஸ்பரிசம் அறிய வேண்டுமா?
அவளின் இதழில் முத்தம் கொடுத்துப்பார்...
மரணம் என்னவென்று அறிய வேண்டுமா ?
அவளையே உண்மையாய் காதலித்து பார்.....

வேண்டுதல்

ஓ பெண்களே ......
உங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்,
நட்பாக பழகி பிறகு காதல் என்று சொல்லவேண்டாம்.
காதலித்து விட்டு பிறகு வெறும் நட்பு மட்டுமே என்று
எங்களை கொல்லவேண்டாம்.

வெள்ளி, 23 ஜூலை, 2010

என்னை பொறுத்தவரை .....

வாழ்கையும் வானமும் ஒன்று
எங்கே துவங்கி எங்கே முடியும் என்று தெரியாது!

திருமணம் என்பது கடல் போல,
துவக்கம் தெரியும் முடிவு எங்கே என்றே தெரியாது!!

காதலும் நிலவும் ஒன்றுதான்,
வெளியே அழகுதான்
உள்ளே புவி ஈர்ப்பு கிடையாது,
தேய்ந்தும் போகும் நிலவை போலவே காதலும்!!!

திமிர்

தீய்ந்து இருக்கும் தீக்குச்சியை பார்த்து
எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தி சிரித்தது
தான் அழிந்து கொண்டிருப்பது தெரியாமல்.....

ரசிகன்

நான் ஒரு கலா ரசிகன்
இல்லை என்றல் உன்னை ரசிப்பேனா ?

என் எண்ணங்கள் பல்லாயிரம்
அதில் உன்னை பற்றி மட்டும் ஓராயிரம்

பாரதி பாடிய பாடல்கள் பல
அதில் அவன் எழுதாமல் விட்ட கவிதை ........நீ

வள்ளுவன் எழுதிய பாக்கள் மொத்தம் 1330
அதில் அவன் தவறவிட்டது உன்னை பற்றி

ஒரு வேளை நான் எழுதவேண்டும் என்று விட்டு இருப்பானோ ?

ஆம் நான் முடிந்து போவதற்குள் உன்னை பற்றி எழுத வேண்டும்
இன்று உன்னை பற்றி எழுதுகிறேன்

நாளை நாம் சேர்ந்த பின்பு
நம்மை பற்றி எழுதுவேன்
உன் கைகளை பற்றி எழுதுவேன்

எனக்குள் ஒரு ஆசை நீண்ட நாட்களாய்
அதை நீயும் அறிவாய்

உன்னை பொறுத்தவரை அது காமம்
என்னை பொறுத்தவரை அது மோகம்
அனால் நம்மை பொறுத்தவரை அது ஒரு யாகம்

உன் சிறுத்த மார்பகத்தில் நான் முகம் புதைத்து அழவேண்டும்
நீ சிரம் தூக்கி என்னை தேற்ற வேண்டும்


தீக்குள் தேடி தேடி நாம் களைத்து போகும் போது அதில் ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும்

எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
பரீட்சை எழுதி விட்டு விடைதாளுக்காக காத்திருக்கும் ஒரு ஏழை மாணவனை போல

சிரிப்பு

சிரித்தது நீ
சிதைந்தது என் இதயம்.....

புன்னகைத்தது நீ
அதில் புதைந்தே போனேன் நான்.....

சிறு குறிப்பு வரைக:

சிறுகதை : காதலி
தொடர்கதை: மனைவி
புதினம்: தாய்

என்னவென்று சொல்வதம்மா ???

உன்னை மீன் என்றேன்
கை நழுவிப்போனாய்

நிலவேன்றேன்
தேய்ந்தே போனாய்

பூ என்றேன்
உதிர்ந்தே போனாய்

உயிர் என்றேன் ......
என் உயிரை அல்லவா எடுத்து போனாய் !!