நான் ஒரு கலா ரசிகன்
இல்லை என்றல் உன்னை ரசிப்பேனா ?
என் எண்ணங்கள் பல்லாயிரம்
அதில் உன்னை பற்றி மட்டும் ஓராயிரம்
பாரதி பாடிய பாடல்கள் பல
அதில் அவன் எழுதாமல் விட்ட கவிதை ........நீ
வள்ளுவன் எழுதிய பாக்கள் மொத்தம் 1330
அதில் அவன் தவறவிட்டது உன்னை பற்றி
ஒரு வேளை நான் எழுதவேண்டும் என்று விட்டு இருப்பானோ ?
ஆம் நான் முடிந்து போவதற்குள் உன்னை பற்றி எழுத வேண்டும்
இன்று உன்னை பற்றி எழுதுகிறேன்
நாளை நாம் சேர்ந்த பின்பு
நம்மை பற்றி எழுதுவேன்
உன் கைகளை பற்றி எழுதுவேன்
எனக்குள் ஒரு ஆசை நீண்ட நாட்களாய்
அதை நீயும் அறிவாய்
உன்னை பொறுத்தவரை அது காமம்
என்னை பொறுத்தவரை அது மோகம்
அனால் நம்மை பொறுத்தவரை அது ஒரு யாகம்
உன் சிறுத்த மார்பகத்தில் நான் முகம் புதைத்து அழவேண்டும்
நீ சிரம் தூக்கி என்னை தேற்ற வேண்டும்
தீக்குள் தேடி தேடி நாம் களைத்து போகும் போது அதில் ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும்
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
பரீட்சை எழுதி விட்டு விடைதாளுக்காக காத்திருக்கும் ஒரு ஏழை மாணவனை போல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக