ஆதவனை பார்த்தே சில பூக்கள் மலரும்
ஆனால், இங்கோ
பூக்களின் அரசி ஒரு சூரியக்குழந்தையை சுட்டு ,சுருக்கி
அஸ்தமிக்க வைத்து விட்டாள்.
பெண் என்பவள் பூக்களை விடவும்
மென்மையானவர்கள் என்று தானே உவமை சொன்னோம்
ஆனால் நீ, பூவை பெயரில் வைத்து,
மனதில் வஞ்சம் வைத்தாய்
ஒரு பிஞ்சை கசக்கி விட்டாய்.
எனக்காக ஒரு வேலை செய், தயவு செய்து
உன் நடவடிக்கை மட்டும் அல்ல
உன் பெயரையும் மாற்றிகொள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக