நீ பிரிந்து செல்கிறாய்
இது நிரந்தர பிரிவு அல்ல
என்று தெரிந்தும்
என்னால் நிலைகொள்ள முடியவில்லை
இன்னும் இரண்டு நாட்கள்
என்று நினைக்கும்பொழுது
என் இரு கண்களை மூட முடியவில்லை
இருதயம் தன் சக்தியை மீறி துடிக்கிறது.
மரணத்தேதியை எதிர்பார்த்து காத்திருக்கும்
தூக்கு தண்டனை கைதியை போல் ஒரு உணர்வு.
இது காதல் அல்ல , காமம் அல்ல அப்படியெனில்
இதற்கு பெயர் தான் நட்பா?
இதுதான் நட்பென்றால் இனி எனக்கு அது வேண்டாம்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால்
சத்தியமாக என்னால் முடியவில்லை.
எதாவது ஒரு அற்புதம் நடந்து
இவர்கள் இங்கேயே இருந்துவிட கூடாதா
என்று என் மனம் ஏங்குகிறது.
சந்தோஷம், துக்கம், கோவம்,
வெறுப்பு என அனைத்தையும்
ஒன்றாக பகிர்ந்த நீங்கள்
பிரிவை மட்டும் எனக்கு கொடுத்துவிட்டு
செல்வது எந்த விதத்தில் நியாயம் ????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக