தலைப்பில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளை நம்மில் பலர் கேட்டு இருக்க கூடும்.
அதுவும் குறிப்பாக சென்னைவாசிகளில் பலர் கண்டிப்பாக கேட்டு இருப்பார்கள்.
இதற்கு உண்மையிலேயே என்னதான் அர்த்தம் என்று யோசித்து பார்த்தால், ஒருவரை அவர் வசிக்கும் பகுதியிலேயே வேறு ஒரு புதிய மனிதர் சண்டை போட்டாலோ இல்லை தான் அவனை விட பெரியவர் என்று காட்டிகொண்டாலோ இந்த வார்த்தையை நாம் கேட்கலாம். உண்மையை சொல்லப்போனால் இந்த வார்த்தையை சொல்லுபவர்கள் வெட்கப்பட வேண்டும் ஏன் என்றால் இவ்வார்த்தைக்கு அர்த்தம் பார்த்தால், இது எங்க ஏரியா இங்க என்னை எதுவும் செய்ய முடியாது என்னிடம் வாய்ச்சண்டையோ, கைச்சண்டையோ போட்டால் என்னால் உன்னை எதிர்த்து போராட முடியவில்லை என்றாலும் நான் வசிக்கும் இடத்தை சேர்ந்தவர்கள் ஒரு கூட்டமாகவே வந்து எனக்கு துணையாக உன்னிடம் சண்டை போடுவார்கள் என்று தானே அர்த்தம். அப்படி என்றால் இந்த வார்த்தை சொல்பவன் ஒரு கோழை தானே. உண்மையில் ஒருவன் உங்க ஏரியா உள்ளேயே வந்து உன்கிட்ட எதிர்த்து நிக்குறான் அப்படீனா அவன் தான் வீரன். என்ன சொல்லுறீங்க ????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக