காதலனை உதறிவிட்டு
மற்றவனை கைப்பிடிக்கும்
கன்னியரை காணும்போதெல்லாம் ஏனோ,
காம்பை உதறிவிட்டு
நாரோடு கோர்த்திருக்கும் பூக்கள் மட்டுமே
ஞாபகம் வருகிறது,
நார் உதிர்த்துவிடும்போது
பூ உதிர்ந்தே போகும் ஆனால்,
காம்பு அங்கே காத்திருக்கும்
மேலும் சில பூக்களை பிரசவிக்க!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக