அன்றொரு நாள்
மெல்லிய மழைதூறளில்
முழுவதுமாய் நனைந்து வந்துகொண்டிருந்தேன்.
முழு நிலவாய் நீ
கணினியின் உதவியோடு
காதல் சொன்னாய் என்னிடத்தில்.
மெல்லிய தூறல்
பேய் மழையை பெய்தது
என் நெஞ்சில்.
உன்னிடத்தில் காதல் வளர்த்து
என்னிடத்தில் கனவு வளர்த்தேன்
உனக்கு திருமணம் என்று பத்திரிக்கை வைத்தாய்
வெப்ப பூமியில் வியர்வை சிந்தும் மனிதனை
நெருப்பு சாட்டையால் அடித்து பிய்ப்பது போல்
என் இதயத்தை உன் வார்த்தை சாட்டையால்
ரணப்படுத்தி போனாய்.
ரணப்பட்ட என் இதயம்
மரணப்படுக்கையில் கடைசி நேரத்தில் இருக்கையில்
வந்தாள் என் அருமை முன்னாள் காதலி
கை தூக்க வந்தாள் என்றிருந்தேன்
ஆனால் அவள் பாலூற்றி அல்லவா சென்றாள்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக