வெள்ளி, 3 செப்டம்பர், 2010

காதல் ஆத்திசூடி

அன்பாய் இருந்தாள்
தரவாய் பேசினாள்
இயன்றதை கொடுத்தாள்
ஈன்றவளைப்போல் உரிமை எடுத்தாள்
உயிராய் அவள் இருந்தாள்
ஊதக்காற்றில் மறைந்து சென்றாள்
எங்கே என்று தேடிச்சென்றேன்
ஏன் என் பின் வருகிறாய் என்றாள்
ஐயத்தோடு கேட்டேன் காதல் இல்லையா என்று,
ஒன்றுமில்லை உன்னிடத்தில்
ஓடிப்போ என்றாள்,
ஔவையின் பொன்மொழி நினைவுக்கு வந்தது
மக்கு ஆண் மகனுக்கு அறிவு வந்தது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக