புதன், 11 ஆகஸ்ட், 2010

நானும் ஒரு கர்ணன் தான்!!

எல்லோராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ளேன்
என் தாயை தவிர.
என் தாயின் கருவறையில் இருந்த நிம்மதி
அவள் கல்லறை போனபின்
என் தாய் மட்டுமல்ல என் நிம்மதியும் இல்லை.
மனைவி வந்தபின் மாற்றம் வருமாம்
வரவில்லை போனது ,
நிம்மதி மட்டுமல்லாமல்
மன அமைதியும்
தோழி ஒருத்தி, தோல் கொடுத்தாள்,
தலை மீது அமர்ந்தாள்,
மூளையை ஊருவி போட்டு மன்னித்துகொள் என்றாள்.
நிம்மதி, அமைதி, சந்தோஷம் அனைத்தும் இழந்து
நிராயுதபாணியாய் நிற்கிறேன்.
கர்ணனை போலே அனைத்தும் குடுத்து
உயிர் மட்டும் மிச்சம் வைத்துள்ளேன்
இன்னும் யாரேனும் உண்டா
என்னிடம் மிச்சம் இருக்கும் உயிரை பிரிப்பதற்கு !!

இன்று மிகவும் மனவருத்தப்பட்டு எழுதியது இது

1 கருத்து: