வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

மாமு

மாமு சாப்பிட்டியா?
மாமு தூங்கலையா?
மாமு வேலைக்கு போகலையா?
உம்மா மாமு...
இப்படித்தான் என்னவள் எனை அழைப்பால்.....
இன்று மாமு இல்லை
ஒரு வார்த்தை கூட பேசாமல்
என்னை வதைக்கிறாள் !!

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

என்றும் இருக்கும்

ஆடிய காலும்
பாடிய வாயும்
சும்மா இருக்காது என்று சொல்வார்கள்
அதே போல்
காதலித்த இதயமும்
சும்மா இருக்காது
என்றும் அழுதுகொண்டே இருக்கும்
எங்கோ ஏமாற்றிசென்ற காதலியை நினைத்து!

கண்ணீர் துளி !!

உன் கண்களை பார்த்தபோது வரவில்லை,
உன் கழுத்துக்கு கீழே பார்க்கும்போதும் வராத காதல்
ஏனோ, உன் கணவனோடு நீ செல்கையில் வருகிறதடி
காதல் அல்ல, கண்களின் ஓரம் ஒரு கண்ணீர் துளி.

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

மரியாதை....

சாமியின் தேரில் இருந்து உதிரும் பூவுக்கான மரியாதை
சாவு ஊர்வலத்தில் கிடக்கும் பூக்களுக்கு கிடைப்பதில்லை
அது போன்றே
சாப்ட்வேர் மாப்பிள்ளைக்கு கிடைக்கும் மரியாதை
சப்போர்ட் டீம் மாப்பிள்ளைக்கு கிடைப்பதில்லை.

காதல்

தன் உள்ளங்கையில் முத்தமிட்டு
உதடு குவித்து சத்தமிட்டு
கண்களை சிமிட்டி பிடித்துகொள்
பறக்கும் முத்தம் என்றாய்
இன்று
என் உள்ளத்தில் குத்திவிட்டு
உணர்சிகளை கொன்றுவிட்டு
பறந்ததடா காதல் என்றாய்
பறந்தது காதல்
மறந்தது நீ
இறந்தது நான்.

திருப்பிக்கொடு

காதலித்த இதயத்தை திருப்பி கொடு என்றாய்
நான் கொடுத்த முத்தங்களை திருப்பி கொடுப்பாயா ?

நிலா

என் நாட்டில் மட்டும் மூன்று நிலாக்கள்
ஒன்று வானில்
இரண்டு உன் கண்களில்.

குயில்

முதன் முதலில் என் பின்னால் இருந்து நீ அழைக்கையில்
ஆச்சர்யத்தோடு திரும்பினேன்
குயில் கூவும் என்று தெரியும்
பேசும் என்று தெரியாது
அதுவும் என் பெயர் சொல்லி அழைத்தபோது
தெரிந்து கொண்டேன் குயில் பேசும் என்று.

புதன், 18 ஆகஸ்ட், 2010

நிறம்

நான் கறுப்பென்பதால்
உன் கண்கள் எனை பார்க்க மறுக்கிறதா?
பெண்ணே நினைவுகொள்
என்னை பார்க்க மறுக்கும்
உன் விழியும் கருப்புதான் !!

சிறை

என்னை உன் இதயச்சிறையில் அடைத்து வை என்றேன்
அனால் நீயோ...
ஈவ் டீசிங் என்ற பெயரில்
மத்திய சிறையில் அடைத்துவிட்டாய் !

நீ...

நிலா, வானம், மேகம் , கடல்,
கடற்கரை, மழை, குதிரை , தாமரை,
பஸ்ஸில் பயணிக்கும்போது
ஜன்னலோரத்தில் மழைச்சாரல்
இது அனைத்தும் அழகாய் இருந்தன
உன்னை பார்க்கும் வரை !!

நம்பிக்கை

உன் பிரிவால் நான்
விரக்தியின் விளிம்பில் அமர்ந்து
மரணத்தின் பள்ளத்தாக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்
என்றாவது நீ வருவாய் என்ற ஒரு
குருட்டு நம்பிக்கையில்.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

சன் டிவி காதல்

காதலிக்கும் போது
வார்த்தை விளையாட்டு மிகவும் பிடிக்கும் என்றவள்..
இன்று என் வாழ்கையை விளையாட்டாய் ஆக்கிவிட்டாள்.
சப்தஸ்வரங்கள் பார்த்து பாடியவள்
என்னை, ஈனஸ்வரத்தில் பாடவைத்துவிட்டாள்.
என் வாழ்க்கை இன்று மர்ம தேசமாய் மாறிவிட்டதடி
மந்திரவாசலை நீ திறந்து
என் வாழ்க்கை சிறக்க வருவாயா?

உவமை....

வீரம் என்றால் சிங்கம் என்றும்,
நன்றி என்றால் நாய் என்றும்,
மானம் என்றால் மான் என்றும் சொன்னீர்களே
இதோ அவ்வரிசையில்
ஏமாற்றுக்காரி என்றால் என்னவளின் பெயரையும்
சேர்த்துகொள்ளுங்கள் !!

கொள்ளி

கரை தெரியாமல் தத்தளிக்கும் கப்பல் போல இருந்த எனக்கு
கலங்கரை விளக்காய் நீ வந்தாய்
கண் தெரியாமல் ரோட்டை கடக்கும்
ஒரு குருட்டு பிச்சைக்காரனாய் நானிருந்தேன்
என் கண்களுக்குள் ஒரு ஒளிபிழம்பாய் நீ வந்தாய்
ஆனால்,
நெருங்கி பார்க்கும்போது தான் தெரிந்தது
நீ ஒளிப்பிழம்பள்ள
என்னுள் ஏற்படுத்தும் ஒரு வலித்தழும்பு என்று
நீ கலங்கரை விளக்கல்ல
என் சிதைக்கு வைக்கும் கொள்ளி!!

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

மரணித்து போகிறேன்...

ஏ புலவா!
வாடிய பூக்களை பார்க்கும்போதெல்லாம்
வாடிப்போனேன் என்றாயடா !!
என்னவளை
இன்னொருவனின் மனைவியாய் பார்க்கும்போதெல்லாம்
நான் மரித்தே போகிறேன் !!!

உன் பாதங்கள்...

என் கவிஞன் சொன்னான் :
உன் பாதங்கள் மண் மீது நடக்க வேண்டியவை அல்ல ....
மலர்களின் மீதென்று
ஆனால் நான் :
அந்த மலர்களில் இருக்கும் முற்கள்
உன் பாதங்களை பதம் பார்த்துவிடுமோ என்றெண்ணி
என் இதயத்தை தரையக்கி
அதன் மீது உன்னை நடக்க வைத்தேன்
ஆனால் உன் கால்களே இன்று முள்ளாகி
என் இதயத்தை அல்லவா கிழித்தது!!

பாரதீ

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழிப்போம் என்றாயே என் பாரதி
இன்று
ஒரு நாட்டையே அழித்து
என் இனத்தவரை
பட்டினியால் சாகடித்து கொண்டிருகிறார்களே
எதை அழிக்க போகிறாய் நீ?

மஹாத்மா...

ஊர் பெயரில் இருந்தது
அவரின் போராட்டத்தில் இல்லை....

புதன், 11 ஆகஸ்ட், 2010

நானும் ஒரு கர்ணன் தான்!!

எல்லோராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ளேன்
என் தாயை தவிர.
என் தாயின் கருவறையில் இருந்த நிம்மதி
அவள் கல்லறை போனபின்
என் தாய் மட்டுமல்ல என் நிம்மதியும் இல்லை.
மனைவி வந்தபின் மாற்றம் வருமாம்
வரவில்லை போனது ,
நிம்மதி மட்டுமல்லாமல்
மன அமைதியும்
தோழி ஒருத்தி, தோல் கொடுத்தாள்,
தலை மீது அமர்ந்தாள்,
மூளையை ஊருவி போட்டு மன்னித்துகொள் என்றாள்.
நிம்மதி, அமைதி, சந்தோஷம் அனைத்தும் இழந்து
நிராயுதபாணியாய் நிற்கிறேன்.
கர்ணனை போலே அனைத்தும் குடுத்து
உயிர் மட்டும் மிச்சம் வைத்துள்ளேன்
இன்னும் யாரேனும் உண்டா
என்னிடம் மிச்சம் இருக்கும் உயிரை பிரிப்பதற்கு !!

இன்று மிகவும் மனவருத்தப்பட்டு எழுதியது இது

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

குழப்பம்

காமம் என்றேன் அது காதல் என்றாய்..
காதல் என்றேன் இது காமம் என்கிறாய்.
உனக்கு நான் என்றேன்
எனக்கு நீ என்றாய்
இன்று உனக்கு நான் என்றேன்
எனக்கு வேறொருவன் என்கிறாய்.....

ஊர்வலம்

ஊர்கோடியில் என்னை நிறுத்தி விட்டு
வேறொருவனுடன் மணகோலத்தில் ஊர்வலம் போகிறாயா?
அது சரி,
அவனை எப்போது தெருக்கோடியில் நிருத்தப்போகிறாய் ??

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

ஊமை காதலன்

சில நேரங்களில் தூரத்தில் இருக்கும் போதுதான் பல விஷயங்கள் அழகு
நிலா, வானம், மேகம் போல....
நான் உன்னை விட்டு செல்லவில்லை
சற்றே ஒதுங்கி செல்கிறேன்
தன் குழந்தையின் படிப்பை
வகுப்பறையின் ஜன்னலோரத்தில் எட்டி பார்த்து மகிழும் ஒரு ஏழை பெற்றோரை போல
உன் மகிழ்ச்சியான வாழ்கையை என்றும் நான் பார்த்திருப்பேன் ஒரு ஊமை காதலனாய் !!

கள்ளகாதல்

ஓ மனிதர்களே,
பிறன்மனை நோக்கும் பழக்கத்தை கள்ளகாதல்
என்று சொல்லாதீர்கள்,
ஏனனில், காதல் என்பது சுத்தமானது,
அதில் கள்ளம் கிடையாது.
வேண்டுமானால் கள்ளகாமம் என்று சொல்லிகொள்ளுங்கள்.

அம்மா

என்னை பத்து மாதம் சுமந்தவள் மறைந்து
நாளையோடு பதினொரு வருடங்கள்.
கருத்தாய் என்னை கருவறையில் காத்தவள்
இன்று கல்லறையில் உறங்குகிறாள்
அம்மா, உன் நினைவுகள் என்றும் இனிமையானவை,
உன்னை நினைக்கையில் இன்றும் என் கண்ணில் நீர்த்துளி