திங்கள், 31 டிசம்பர், 2012

3

மனிதர்களை நான் 3 வகையாக பார்க்கிறேன். கல், களிமண் மற்றும் தண்ணீராக. கல் மனிதர்கள் தாம் சொல்வது மற்றும் செய்வதே சரி என வாழ்பவர்கள். இவரை போன்ற மனிதர்களை தண்ணீர் அல்ல யாருடைய கண்ணீராலும் கூட கரைக்க முடியாது. கல்லை போன்றே பூமிக்கு பாரமாய் வாய்த்தவர்கள். களிமண் மனிதர்கள், இவர்களை நம் இஷ்டத்திற்கு பிசைந்து நமக்கு தேவையானவற்றை உருவாக்கி கொள்ளலாம். சுய புத்தி இல்லாமல் செயல் படும் மனிதர்கள். தண்ணீர் மனிதர்கள். தண்ணீருக்கு நிறம் கிடையாது, அதை எந்த பாத்திரத்தில் ஊற்றுகிறோமோ அதே வடிவத்திற்கு அது மாறிவிடும். நின்றால் குளம், ஓடினால் நதி, சீறினால் கடல். எந்த உரு எடுத்தாலும் மற்றவர்க்கு நன்மையே பயக்கும். இது போன்றே சில மனிதர்களும் உண்டு. இதில் நான் யார் என்பது எனக்கு தெரியும், நீ யார் என்பதை நீயே தேர்ந்தேடுத்துகொள்.

புதன், 28 நவம்பர், 2012

உலக தத்துவம்

உலக தத்துவத்தை இரண்டே வார்த்தையில் எங்க ஊர் பெட்ரோல் பங்கில் சொல்லி வைத்தான் #FREE AIR FREE WATER.

புதன், 21 நவம்பர், 2012

பணம்.

பணம். அச்சடிச்ச காகிதம் ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டி போடுகிறது. உயிரின் மதிப்பைவிட பணத்தின் மதிப்பே இங்கே போற்றப்படுகிறது. பணத்தின் மீது பற்றட்டு காவி உடை பூண்டு கடவுளை தொழ சென்றால் அங்கே, கடவுளுக்கு பணத்தினால் மாலை அணிவித்து பூஜையும் புனஸ்காரமும். மனிதனை மிருகமாக்கும் இந்த காகித பூதம், வேசியை கூட பத்தினி என்று சொல்லும் இந்த கூட்டம், அவளிடத்தில் அபரிமிதமான பணம் இருந்தால்.

செவ்வாய், 20 நவம்பர், 2012

திங்கள், 24 செப்டம்பர், 2012

வேதனை

பெற்றோரை வேதனை படுத்தும் பிள்ளைகளுக்கு தெரிவதில்லை. தன்னுள் ஓடிக்கொண்டிருப்பது தாயின் கண்ணீரும் தந்தையின் வியர்வையும் என்று.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

சாமி

ஆலயத்திற்குள் அமைந்திருக்கும் "கற்சிலை" தான் சாமி என்று உள் செல்லும் ஆசாமிக்கு, தெரியாது! தானும் ஒரு "சாமி"தான் அங்கு வெளியில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரனுக்கு !!

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

ஏகாம்பரம்!!

ஒவ்வொரு மரண வீட்டிலும் எங்கிருந்தோ ஒரு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் வந்து விடுகிறார் !

நண்பன் !!

முன் பின் தெரியாத ஒருவர் மயக்கமுறும்பொழுது அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, கொஞ்சம் தண்ணி குடிங்க என்று நீ கொடுப்பாயானால் நீ தான் மனிதன். நொந்து நூலாகி, அந்து அவலாகி வரும் ஒருவனிடம், வா மச்சி தண்ணி அடிக்கலாம்னு கூப்பிட்டாயானால் நீதாண்டா நண்பன். நான் நண்பன் நீ மனுஷனா???

புதன், 4 ஜூலை, 2012

நண்பன்

திருவிழா கூட்டமோ, திருமண கூட்டமோ, எப்பேற்பட்ட கூட்டத்தின் நடுவிலும், "மச்சி" என்றொரு குரலோசை கேட்டவுடன் சட்டென்று திரும்புகிறது என்னோடு சேர்ந்து என் நினைவுகளும் தான் !! நண்பேண்டா !!!

செவ்வாய், 12 ஜூன், 2012

உன் நினைவு

நீ கொடுத்த பரிசுகளை எல்லாம் நினைவுப்போருளாக வைத்து இருக்கும் எனக்கு உன் நினைவுகலையா மறந்து விட முடியும் ?

வியாழன், 10 மே, 2012

வணிகம் செய்ய வந்து, கொஞ்சம் கொஞ்சமாக, இந்திய நாட்டை வளைத்து பிடித்த ஆங்கிலேயனை போல, மனதில் எங்கோ ஓர் மூலையில் சிறு புள்ளியாய், சிறு துரும்பாய் இருந்த கவலைகள், மெல்ல மெல்ல முன்னேறி முழு மனதையும் ஆக்கிரமித்து விட்டது. இதயம் பாரமாக கால்கள் துவள கண்கள் சோர்ந்து மூளை தவறான முடிவு எடுக்க சொல்லி மிரட்டுகிறது. வாழ்வா ? சாவா ? எனும் மரணப்போராட்டதின் இடையே சிக்கித்தவிக்கும் நான்........ இறைவா, எது சரி என்று படுகிறதோ அதையே நீர் செய்யும்..............

செவ்வாய், 8 மே, 2012

மதுபான கடை

ஐயர், அய்யங்கார், செட்டியார், முதலியார், வன்னியர், பள்ளர், பறையர் என அனைத்து சாதியினரும் பாகுபாடின்றி கூடும் மதுபான கடை உண்மையில் சமரசம் உலாவும் இடமே !

பணம்

பணம் பணம் பணம் பணம் மட்டுமே வாழ்க்கை ஆகிப்போனது. உடன் பிறந்தவன், உற்ற நண்பன், கட்டி அணைத்த காதலி, கை பிடித்த மனைவி, வளர்த்த தந்தை, வந்து போன சொந்தம், இது எல்லாம் பாசம் பார்த்து வந்தது இன்று பணம் இல்லாமல் விட்டு சென்றது. Seriously saying AMMA I MISS U A LOT.

திங்கள், 7 மே, 2012

6தீ !!

துறு துறு பார்வை, பட பட பேச்சு, விறு விறு நடை, சிறு சிறு இடை, உள்ளத்தில் எல்லாம் புண் பட்ட காயம், ஆயினும் உதட்டில் என்றும் ஒரு புன்சிரிப்பு, இதுதான் என் தோழி ஆர்த்தி !

மாற்றம்

இரட்டை சடை இன்று pony tail ஆகிவிட்டது, பாவாடை சட்டை மைக்ரோ மிடியும், ஜீன்ஸ் பான்ட்டுமாக மாறிவிட்டன தொலை தூர உறவுகள் இன்று தொலைந்து போன உறவுகள் ஆகிவிட்டன. எது எப்படி மாறினாலும் அன்பே ! உன் அன்பும், நட்பும், காதலும் இன்னமும் அப்படியே தான் உள்ளது

புதன், 25 ஏப்ரல், 2012

அழகு!!

பெண்களின் கண்கள் அழகென்றால், அந்த கண்களால் பேசும் பெண்கள் மிக அழகு!!

அம்மா

ஒரு வரி கவிதை மகேஸ்"வரி"

நன்மை

எது நடந்தாலும் அது நன்மைக்கே எனும் மனப்பான்மை கொண்டவர்கள் கூட, கலங்கிதான் போகிறார்கள். அவர்கள் வீட்டில் ஒரு மரணம் சம்பவிக்கும்ப்பொழுது அதுவும் ஒரு துர்மரணம் ஏற்படும்பொழுது இதுவும் நன்மைக்கே என்று ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கத்தான் செய்கிறது.

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

வாழும் காலம் கொஞ்சமே

வாழும் காலம் கொஞ்சமே,
அதை
வாழ்ந்துதான் பார்ப்போமே இன்பமாய் !

குழிக்குள் செல்லும் வரை
பழி எதற்கு?
விழி திறப்போம், வழி பிறக்கும் !!

கடற்கரையில் கரைத்த பின்பு,
கல்லறையில் படுத்த பின்பு,
யாரிடம் பேசிவிட போகிறாய் அன்பாக ?

இருக்கும் வரை இன்பம் என்ன ?
இறக்கும் வரை இன்புற்றி இருப்போம்
இறந்தும் இறவா புகழ் பெறுவோம்

வாழும் காலம் கொஞ்சமே,
அதை
வாழ்ந்துதான் பார்ப்போமே இன்பமாய் !

கர்ப்பம்

10 மாதம் சுமந்து கர்ப்பம் தரிப்பது பெண்களுக்கு மறு ஜென்மம் என்றால்,
பல மாதங்கள் காதலை சொல்லாமல் மனதுக்குள் வைத்து பின் சொல்லப்போகும் தருணம் எங்களுக்கு மறு ஜென்மம் !!

வியாழன், 29 மார்ச், 2012

இன்னும் இருக்கிறதா மனிதாபிமானம் ?

இன்னும் இருக்கிறதா மனிதாபிமானம் ?

ஒருத்தன் 8வது மாடியிலிருந்து தவறி விழுந்து 7 வது மாடியின் ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கி கொண்டிருக்கிறான் காப்பாற்றுங்கள் என்று கூவியபடி. அதை பார்த்த ஒருவன் வேகமாக ஓடோடி வருகிறான் வந்தவன் கையிலிருக்கும் மொபைல் எடுத்து ஒரு படம் பிடிக்கிறான். அதை சமூக வலைத்தளங்களில் பிரசூரம் செய்கிறான். அதற்க்கு அவர் நண்பர்கள் 100 likes வேறு. அதுவும் இல்லாமல் அவர்கள் போடும் comments அது ஒரு கொடுமை.

nice picture macha, looks awesome, nice timing da, hey dude where did u got this da?, is tht man is real da?
இப்படி எல்லாம் comments அதற்க்கு அவர் பதில் கொடுப்பார்.
hey friends thanks for your likes. it is real buddy. i took this today morning.

என்ன கொடுமை இது?

இன்னும் இருக்கிறதா மனிதாபிமானம் ?

வியாழன், 15 மார்ச், 2012

பிரிந்த நண்பன்.

ஒரு வேளை உன்னை காணாமலே நான் இறந்து விட்டால்,

சவப்பெட்டியில் இருக்கும் என்னை காதருகில் வந்து கூப்பிட்டு பார்.

ஒரு வேளை, உன் குரல் கேட்டு உயிர்த்தேழுந்தாலும் எழுந்தேறிப்பேன்!!

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

?????????

யாரென்றும் தெரியாது யாவரென்றும் தெரியாது ஆனால்,
பார்த்த மாத்திரத்தில் துரத்தி சென்று சொல்ல தோன்றும்,
சில நேரங்களில் வேகமாய் பின் தொடர்ந்து சென்று
போகிற போக்கில் சொல்லிவிட்டு போவோம்
பாஸ் சைடு ஸ்டாண்ட் !!!