வணிகம் செய்ய வந்து,
கொஞ்சம் கொஞ்சமாக,
இந்திய நாட்டை வளைத்து பிடித்த ஆங்கிலேயனை போல,
மனதில் எங்கோ ஓர் மூலையில்
சிறு புள்ளியாய், சிறு துரும்பாய் இருந்த
கவலைகள், மெல்ல மெல்ல முன்னேறி
முழு மனதையும் ஆக்கிரமித்து விட்டது.
இதயம் பாரமாக
கால்கள் துவள
கண்கள் சோர்ந்து
மூளை தவறான முடிவு எடுக்க சொல்லி மிரட்டுகிறது.
வாழ்வா ? சாவா ? எனும் மரணப்போராட்டதின் இடையே சிக்கித்தவிக்கும்
நான்........
இறைவா, எது சரி என்று படுகிறதோ அதையே
நீர் செய்யும்..............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக