திங்கள், 31 ஜனவரி, 2011

வேரில் தீ வைத்து விடாதே!!

என் உயிர் தோழியே,
உன் செய்கைகளுக்கு காரணம் நானறியேன்.
ஆனால், என்னில் எந்த மாற்றமும் இல்லை - இருப்பினும்
உன் மாற்றம் கண்டு விலகிச்செல்கிறேன்.
உன்னை மட்டும் அல்ல,
உன்னை பற்றிய நினைவுகளுக்கே விடை கொடுக்கிறேன்.
விட்டு செல்வதற்கு காரணம்
யார் வேதனைக்கும் நான் காரணமாக இருக்கக்கூடாது என்பதற்காக.
யார் வேதனைக்கும் நான் காரணமாக இருந்ததும் இல்லை.
திடீரென்று வந்தாய், தீயாய் சொன்னாய்
என்னுடன் பேச விருப்பமில்லை என்று.
சுக்கு நூறகிப்போனேன்.
விடை பெறுகிறேன்
மீண்டும் வருவதாய் இல்லை.
ஒரே ஒரு வேண்டுகோள்
இனிவரும் நட்பினையவது இருக்கமாய் பற்றிக்கொள்
வேரில் தீ வைத்து விடாதே !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக