அனைத்து ஆண்களும் விசுவாமித்ரர்களே,
மேனகையை காணாதவரை !!
திங்கள், 31 ஜனவரி, 2011
சிலோன் சகோதரி
எந்திர துப்பாக்கியின் சத்தங்களே
எங்கள் செவியில் ஒலிக்கும் செவக்கூவல்.
வெடித்துச்சிதறும் தீபிழம்புகள் தான் எங்களின்
அதிகாலை சூரியன்.
என் சகோதரியின் கற்பழிப்பு கதறல்கள்
எங்களின் இரவு நேர தாலாட்டாகிப்போனது
பிள்ளைகள் கண் அயர்ந்ததா என
பத்து முறை பார்த்த பின்பே
கணவனோடு கலவி கொண்டோம்
இன்று, ஈன்றெடுத்த பிள்ளை முன்பே
கற்பழிக்கப்பட்டு, கந்தல் துணியாய் கதறி துடிக்கிறோம்.
சேற்றில் செந்தாமரை முளைக்கும்
இந்த ரத்தசகதியில் எந்தலைமுறை முளைக்கும் போதே
கருகிபோனதென்ன ????
எங்கள் செவியில் ஒலிக்கும் செவக்கூவல்.
வெடித்துச்சிதறும் தீபிழம்புகள் தான் எங்களின்
அதிகாலை சூரியன்.
என் சகோதரியின் கற்பழிப்பு கதறல்கள்
எங்களின் இரவு நேர தாலாட்டாகிப்போனது
பிள்ளைகள் கண் அயர்ந்ததா என
பத்து முறை பார்த்த பின்பே
கணவனோடு கலவி கொண்டோம்
இன்று, ஈன்றெடுத்த பிள்ளை முன்பே
கற்பழிக்கப்பட்டு, கந்தல் துணியாய் கதறி துடிக்கிறோம்.
சேற்றில் செந்தாமரை முளைக்கும்
இந்த ரத்தசகதியில் எந்தலைமுறை முளைக்கும் போதே
கருகிபோனதென்ன ????
மறு பிறவி
இன்னோர் ஜென்மம் இருப்பின்
எனக்கு மானிடப்பிறவி வேண்டாம்.
கல்லை கடவுளாகவும்
மனிதனை கல்லாகவும் பார்க்கும் இடம் இது.
நட்பு எனும் பெயரில்
நயவஞ்சகர்கள் நடமாடும் பூமி இது.
காதல் என்ற பெயரில்
கயவர்கள் கொண்ட பூலோகம்.
பாசம் என்ற பெயரில்
பசப்பு காட்டும் பாவிகள் உள்ள உலகம்.
இன்னோர் பிறப்பிருப்பின்
இறைவா, எனை கல்லாய், மண்ணாய், காற்றாய்
படைத்திடுவாய் !!
எனக்கு மானிடப்பிறவி வேண்டாம்.
கல்லை கடவுளாகவும்
மனிதனை கல்லாகவும் பார்க்கும் இடம் இது.
நட்பு எனும் பெயரில்
நயவஞ்சகர்கள் நடமாடும் பூமி இது.
காதல் என்ற பெயரில்
கயவர்கள் கொண்ட பூலோகம்.
பாசம் என்ற பெயரில்
பசப்பு காட்டும் பாவிகள் உள்ள உலகம்.
இன்னோர் பிறப்பிருப்பின்
இறைவா, எனை கல்லாய், மண்ணாய், காற்றாய்
படைத்திடுவாய் !!
வேரில் தீ வைத்து விடாதே!!
என் உயிர் தோழியே,
உன் செய்கைகளுக்கு காரணம் நானறியேன்.
ஆனால், என்னில் எந்த மாற்றமும் இல்லை - இருப்பினும்
உன் மாற்றம் கண்டு விலகிச்செல்கிறேன்.
உன்னை மட்டும் அல்ல,
உன்னை பற்றிய நினைவுகளுக்கே விடை கொடுக்கிறேன்.
விட்டு செல்வதற்கு காரணம்
யார் வேதனைக்கும் நான் காரணமாக இருக்கக்கூடாது என்பதற்காக.
யார் வேதனைக்கும் நான் காரணமாக இருந்ததும் இல்லை.
திடீரென்று வந்தாய், தீயாய் சொன்னாய்
என்னுடன் பேச விருப்பமில்லை என்று.
சுக்கு நூறகிப்போனேன்.
விடை பெறுகிறேன்
மீண்டும் வருவதாய் இல்லை.
ஒரே ஒரு வேண்டுகோள்
இனிவரும் நட்பினையவது இருக்கமாய் பற்றிக்கொள்
வேரில் தீ வைத்து விடாதே !!
உன் செய்கைகளுக்கு காரணம் நானறியேன்.
ஆனால், என்னில் எந்த மாற்றமும் இல்லை - இருப்பினும்
உன் மாற்றம் கண்டு விலகிச்செல்கிறேன்.
உன்னை மட்டும் அல்ல,
உன்னை பற்றிய நினைவுகளுக்கே விடை கொடுக்கிறேன்.
விட்டு செல்வதற்கு காரணம்
யார் வேதனைக்கும் நான் காரணமாக இருக்கக்கூடாது என்பதற்காக.
யார் வேதனைக்கும் நான் காரணமாக இருந்ததும் இல்லை.
திடீரென்று வந்தாய், தீயாய் சொன்னாய்
என்னுடன் பேச விருப்பமில்லை என்று.
சுக்கு நூறகிப்போனேன்.
விடை பெறுகிறேன்
மீண்டும் வருவதாய் இல்லை.
ஒரே ஒரு வேண்டுகோள்
இனிவரும் நட்பினையவது இருக்கமாய் பற்றிக்கொள்
வேரில் தீ வைத்து விடாதே !!
சிற்பி
ஒரு குழந்தையின் வருகைக்கு பிறகு
கணவனுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும்
அக்குழந்தைக்கே கிடைத்து விடுகிறது.
அது சரி,
செதுக்கிய சிற்பியை விட , செதுக்கப்பட்ட சிலைக்கு தானே
நம் நாட்டில் பாலாபிஷேகமும் நெய்யாபிஷேகமும்.
கணவனுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும்
அக்குழந்தைக்கே கிடைத்து விடுகிறது.
அது சரி,
செதுக்கிய சிற்பியை விட , செதுக்கப்பட்ட சிலைக்கு தானே
நம் நாட்டில் பாலாபிஷேகமும் நெய்யாபிஷேகமும்.
வாழ்க்கை படகு
வாழ்க்கை என்பது ஒரு படகை போன்றது
அதில் கணவன் வெறும் துடுப்பு மட்டுமே,
மனைவி தான் படகோட்டி,
அவள் அந்த படகை அழகாகவும் செலுத்தலாம்
ஆழமாகவும் செலுத்தலாம்.
அதில் கணவன் வெறும் துடுப்பு மட்டுமே,
மனைவி தான் படகோட்டி,
அவள் அந்த படகை அழகாகவும் செலுத்தலாம்
ஆழமாகவும் செலுத்தலாம்.
வாழ்க்கை
ஒருவர் மட்டுமே அன்பு செலுத்தி
அதை இன்னொருவர் உணராமல் போகும்போது தான்
வாழ்க்கை கசப்பாகிறது.
உணர்வை புரிந்து கொள்ளாமல்
உடம்பை மட்டுமே பார்க்கும் போது அங்கே
வாழ்க்கை கசாப்பு ஆகிறது.
ஒருவர் மேல் ஒருவர்
வைத்து இருக்கும் பற்றுதலும், புரிதலும்
விட்டு போகும்போதுதான்
வாழ்க்கை அங்கே வழக்கை நோக்கி போகிறது.
அதை இன்னொருவர் உணராமல் போகும்போது தான்
வாழ்க்கை கசப்பாகிறது.
உணர்வை புரிந்து கொள்ளாமல்
உடம்பை மட்டுமே பார்க்கும் போது அங்கே
வாழ்க்கை கசாப்பு ஆகிறது.
ஒருவர் மேல் ஒருவர்
வைத்து இருக்கும் பற்றுதலும், புரிதலும்
விட்டு போகும்போதுதான்
வாழ்க்கை அங்கே வழக்கை நோக்கி போகிறது.
வலி
காதல் தோல்வியின் வலி என்பது
இதுநாள் வரை தான் காதலிக்கப்படவே இல்லை
என்பதை உணரும்போதுதான்
அதிகம் ஆகிறது.
இதுநாள் வரை தான் காதலிக்கப்படவே இல்லை
என்பதை உணரும்போதுதான்
அதிகம் ஆகிறது.
வியாழன், 27 ஜனவரி, 2011
தெலுங்கானா
ஒன்றும் புரியவில்லை
சொந்த ஊரையே இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா கேட்பார்கலாம் அதை நம்ம பிரதமர் மீட்டிங் போட்டு யோசிப்பாராம். ஒரு மனிதன் தன இனத்துக்காக 30 ஆண்டுகள் சுயநலமின்றி போராடினான், அவனுக்கு நாம் வாய்த்த பெயர் தீவிரவாதி. அங்கே நம் இனத்தவரை கொன்று போடும் போதும் நமக்கு பதவி மட்டுமே முக்கியம் என கருதி வாய் மூடி இருந்தவர் தானே இந்த தமிழ் தாத்தா. அங்கே அந்த தமிழன் வீழ்ந்ததற்கு “கருணா” எனும் ஒரு நன்றி கேட்டவன் காரணம், இங்கயும் ஒரு “கருணா” தான் கா”ரணம்”.
இதோ தேர்தல் வருகிறது இப்பொழுதான் எல்லாமே இவர்களின் கண்களுக்கு தெரியும்.
ஓ முட்டாள் உடன் பிறப்புகளே யோசித்து வாக்களி. இம்முறை நம் கைவிரலில் வைக்கப்படும் மை நம் முகத்துக்கு வேண்டாமே.
சொந்த ஊரையே இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா கேட்பார்கலாம் அதை நம்ம பிரதமர் மீட்டிங் போட்டு யோசிப்பாராம். ஒரு மனிதன் தன இனத்துக்காக 30 ஆண்டுகள் சுயநலமின்றி போராடினான், அவனுக்கு நாம் வாய்த்த பெயர் தீவிரவாதி. அங்கே நம் இனத்தவரை கொன்று போடும் போதும் நமக்கு பதவி மட்டுமே முக்கியம் என கருதி வாய் மூடி இருந்தவர் தானே இந்த தமிழ் தாத்தா. அங்கே அந்த தமிழன் வீழ்ந்ததற்கு “கருணா” எனும் ஒரு நன்றி கேட்டவன் காரணம், இங்கயும் ஒரு “கருணா” தான் கா”ரணம்”.
இதோ தேர்தல் வருகிறது இப்பொழுதான் எல்லாமே இவர்களின் கண்களுக்கு தெரியும்.
ஓ முட்டாள் உடன் பிறப்புகளே யோசித்து வாக்களி. இம்முறை நம் கைவிரலில் வைக்கப்படும் மை நம் முகத்துக்கு வேண்டாமே.
செவ்வாய், 25 ஜனவரி, 2011
நீ...
உன்னுடன் பேசும்போதெல்லாம் இடை மரிக்காமல் இருக்க சொல்கிறாய்
இடை என்பதே இருக்கத்தானே?
கோவம் வேண்டாம் நடுவில் எதுவும் சொல்ல மாட்டேன்
எதுவாயினும் காதில் சொல்கிறேன் !!
உன் கை வளைத்து கை வளை சத்தம் சேமித்து வைக்கிறேன்
என் இரவு நேர தாலாட்டுக்காக.
இடை என்பதே இருக்கத்தானே?
கோவம் வேண்டாம் நடுவில் எதுவும் சொல்ல மாட்டேன்
எதுவாயினும் காதில் சொல்கிறேன் !!
உன் கை வளைத்து கை வளை சத்தம் சேமித்து வைக்கிறேன்
என் இரவு நேர தாலாட்டுக்காக.
வியாழன், 20 ஜனவரி, 2011
எங்கே இருக்கிறாய்?
கண்ணும் கருத்துமாக கணிணியை பார்த்து இருந்த என்னை
இந்த கன்னியை பார்க்க வைத்த அழகியே
எங்கே சென்றாயடி ?
அறிவில் பிறந்தவர் மரிப்பதில்லை உன் அழகில் விழுந்தவர் எழுவதில்லை
கண்களால் கைது செய்து என்னை உன் இதய சிறையில் அடைத்து
முத்த சாட்டை எடுத்து என் உடலெங்கும் வீசி இன்ப சித்திரவதை செய்யடி
என் செல்லமே!
கண்களில் ஒளி வீசி என் இதயத்தில் வலி ஏற்படுத்தாதே,
காமம் படர்ந்த கண்களில் காதல் தெரிய வைத்தவள் நீ
காதல் தெரியும் கண்களில் சோகம் தெரிய வைக்காதே
கடலில் விழுந்து தத்தளிக்கும் ஒருவன் ஒரு சிறிய பிடிப்பாவது
கிடைக்காதா என பார்ப்பது போல்
ஏங்கி தவித்து பார்த்து கொண்டிருக்கிறேன்
உன் வரவுக்காக....
இந்த கன்னியை பார்க்க வைத்த அழகியே
எங்கே சென்றாயடி ?
அறிவில் பிறந்தவர் மரிப்பதில்லை உன் அழகில் விழுந்தவர் எழுவதில்லை
கண்களால் கைது செய்து என்னை உன் இதய சிறையில் அடைத்து
முத்த சாட்டை எடுத்து என் உடலெங்கும் வீசி இன்ப சித்திரவதை செய்யடி
என் செல்லமே!
கண்களில் ஒளி வீசி என் இதயத்தில் வலி ஏற்படுத்தாதே,
காமம் படர்ந்த கண்களில் காதல் தெரிய வைத்தவள் நீ
காதல் தெரியும் கண்களில் சோகம் தெரிய வைக்காதே
கடலில் விழுந்து தத்தளிக்கும் ஒருவன் ஒரு சிறிய பிடிப்பாவது
கிடைக்காதா என பார்ப்பது போல்
ஏங்கி தவித்து பார்த்து கொண்டிருக்கிறேன்
உன் வரவுக்காக....
செவ்வாய், 18 ஜனவரி, 2011
காத்திருக்கிறேன்
முதல் காதல் முதல் முத்தம் மறக்காது என்பார்கள், அதுபோல், என் முதல் கவிதையும் நீ மறக்க மாட்டாய் என்று நம்புகிறேன். இருப்பினும் உன் கண்களை கலங்க வைத்தமைக்காக வருந்துகிறேன். உன்னை கலங்க வைத்ததால் யோசிக்கிறேன் இனியும் நான் எழுத வேண்டுமா என்று?
நாத்து நட்டு வைத்து விட்டு, மழைக்காக வானத்தை பார்த்து காத்திருக்கும் ஓர் ஏழை விவசாயியை போல காத்திருக்கிறேன் உனக்காக.
நாத்து நட்டு வைத்து விட்டு, மழைக்காக வானத்தை பார்த்து காத்திருக்கும் ஓர் ஏழை விவசாயியை போல காத்திருக்கிறேன் உனக்காக.
திங்கள், 17 ஜனவரி, 2011
புதன், 12 ஜனவரி, 2011
முத்தம்
முத்தம் கேட்டவுடன் சத்தமே இல்லாமல் சென்று விட்டாய்
ஏன்?
முத்தம் கொடுத்தால் மொத்தமும் கேட்பேன் என்று நினைத்தாயோ ??
ஏன்?
முத்தம் கொடுத்தால் மொத்தமும் கேட்பேன் என்று நினைத்தாயோ ??
திங்கள், 10 ஜனவரி, 2011
சேமிப்பு
கை விரலால் இதயத்தை கீறி ரணப்படுதினாய்,
கா"ரணம்" கேட்பின்
நகக்கண்ணில் என் இதயத்துகள்களை சேமிக்கிறேன் என்றாய்.
கா"ரணம்" கேட்பின்
நகக்கண்ணில் என் இதயத்துகள்களை சேமிக்கிறேன் என்றாய்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)