வெள்ளி, 30 ஜூலை, 2010

வகை

பேதை, பெதும்பை, அறிவை, தெரிவை , மங்கை, மடந்தை, பேரிளம்பெண்
என்று ஏழு வகையாக பெண்ணை வகை படுத்தி சொன்னவனே,
அவளின் மனதையும் வகை பிரித்து வைத்து இருந்தால் நாங்களாவது பிழைதிருப்போமே!!

என் தோழி

உன் பெயரில் உள்ளது என்பதற்காக
இப்படியா கொட்டி பேசுவது??

தொலைந்தவை....

கூகுள் தேடுதல் எதையும் தேடி தருமாமே ?
எங்கே என் தொலைந்த இதயத்தை தேடிதரச்சொல் !
தமிழக காவல் துறைக்கு உலகத்தில் சிறந்த இரண்டாவது இடமாமே ??
எங்கே என் காணமல் போன காதலை கண்டுபிடித்து தரச்சொல் !!

புதன், 28 ஜூலை, 2010

ஆதித்யா

கைகள் குறுக்கி கால்கள் சுருக்கி
பெட்டிக்குள் இருந்த அந்த மழலைப்பிஞ்சை பாத்தபோது
தாயின் கருவில் இருக்கும் ஒரு குழந்தையை போன்றே இருந்தது.
என் மனதுக்குள் ஆயிரம் கேள்வி
ஆதித்யா! என்ன நினைத்தாய் ???
"அப்பா, நீ அம்மாவிடம் செய்த பிழை நான் பிறந்தேன்
இவளோடு நீ செய்த தவறு, நான் இறந்துகொண்டிருகிறேன்".

என்ன நினைத்தாய் என் செல்வமே ??

பூவரசி.....

ஆதவனை பார்த்தே சில பூக்கள் மலரும்
ஆனால், இங்கோ
பூக்களின் அரசி ஒரு சூரியக்குழந்தையை சுட்டு ,சுருக்கி
அஸ்தமிக்க வைத்து விட்டாள்.
பெண் என்பவள் பூக்களை விடவும்
மென்மையானவர்கள் என்று தானே உவமை சொன்னோம்
ஆனால் நீ, பூவை பெயரில் வைத்து,
மனதில் வஞ்சம் வைத்தாய்
ஒரு பிஞ்சை கசக்கி விட்டாய்.
எனக்காக ஒரு வேலை செய், தயவு செய்து
உன் நடவடிக்கை மட்டும் அல்ல
உன் பெயரையும் மாற்றிகொள்.

செவ்வாய், 27 ஜூலை, 2010

காதலித்து பார்

மின்னலின் ஒளி கீற்றை காணவேண்டுமா?
உன்னவளின் கண் அசைவை நேரில் பார்....
பூ இதழின் ஸ்பரிசம் அறிய வேண்டுமா?
அவளின் இதழில் முத்தம் கொடுத்துப்பார்...
மரணம் என்னவென்று அறிய வேண்டுமா ?
அவளையே உண்மையாய் காதலித்து பார்.....

வேண்டுதல்

ஓ பெண்களே ......
உங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்,
நட்பாக பழகி பிறகு காதல் என்று சொல்லவேண்டாம்.
காதலித்து விட்டு பிறகு வெறும் நட்பு மட்டுமே என்று
எங்களை கொல்லவேண்டாம்.

வெள்ளி, 23 ஜூலை, 2010

என்னை பொறுத்தவரை .....

வாழ்கையும் வானமும் ஒன்று
எங்கே துவங்கி எங்கே முடியும் என்று தெரியாது!

திருமணம் என்பது கடல் போல,
துவக்கம் தெரியும் முடிவு எங்கே என்றே தெரியாது!!

காதலும் நிலவும் ஒன்றுதான்,
வெளியே அழகுதான்
உள்ளே புவி ஈர்ப்பு கிடையாது,
தேய்ந்தும் போகும் நிலவை போலவே காதலும்!!!

திமிர்

தீய்ந்து இருக்கும் தீக்குச்சியை பார்த்து
எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தி சிரித்தது
தான் அழிந்து கொண்டிருப்பது தெரியாமல்.....

ரசிகன்

நான் ஒரு கலா ரசிகன்
இல்லை என்றல் உன்னை ரசிப்பேனா ?

என் எண்ணங்கள் பல்லாயிரம்
அதில் உன்னை பற்றி மட்டும் ஓராயிரம்

பாரதி பாடிய பாடல்கள் பல
அதில் அவன் எழுதாமல் விட்ட கவிதை ........நீ

வள்ளுவன் எழுதிய பாக்கள் மொத்தம் 1330
அதில் அவன் தவறவிட்டது உன்னை பற்றி

ஒரு வேளை நான் எழுதவேண்டும் என்று விட்டு இருப்பானோ ?

ஆம் நான் முடிந்து போவதற்குள் உன்னை பற்றி எழுத வேண்டும்
இன்று உன்னை பற்றி எழுதுகிறேன்

நாளை நாம் சேர்ந்த பின்பு
நம்மை பற்றி எழுதுவேன்
உன் கைகளை பற்றி எழுதுவேன்

எனக்குள் ஒரு ஆசை நீண்ட நாட்களாய்
அதை நீயும் அறிவாய்

உன்னை பொறுத்தவரை அது காமம்
என்னை பொறுத்தவரை அது மோகம்
அனால் நம்மை பொறுத்தவரை அது ஒரு யாகம்

உன் சிறுத்த மார்பகத்தில் நான் முகம் புதைத்து அழவேண்டும்
நீ சிரம் தூக்கி என்னை தேற்ற வேண்டும்


தீக்குள் தேடி தேடி நாம் களைத்து போகும் போது அதில் ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும்

எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
பரீட்சை எழுதி விட்டு விடைதாளுக்காக காத்திருக்கும் ஒரு ஏழை மாணவனை போல

சிரிப்பு

சிரித்தது நீ
சிதைந்தது என் இதயம்.....

புன்னகைத்தது நீ
அதில் புதைந்தே போனேன் நான்.....

சிறு குறிப்பு வரைக:

சிறுகதை : காதலி
தொடர்கதை: மனைவி
புதினம்: தாய்

என்னவென்று சொல்வதம்மா ???

உன்னை மீன் என்றேன்
கை நழுவிப்போனாய்

நிலவேன்றேன்
தேய்ந்தே போனாய்

பூ என்றேன்
உதிர்ந்தே போனாய்

உயிர் என்றேன் ......
என் உயிரை அல்லவா எடுத்து போனாய் !!