திங்கள், 24 செப்டம்பர், 2012

வேதனை

பெற்றோரை வேதனை படுத்தும் பிள்ளைகளுக்கு தெரிவதில்லை. தன்னுள் ஓடிக்கொண்டிருப்பது தாயின் கண்ணீரும் தந்தையின் வியர்வையும் என்று.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

சாமி

ஆலயத்திற்குள் அமைந்திருக்கும் "கற்சிலை" தான் சாமி என்று உள் செல்லும் ஆசாமிக்கு, தெரியாது! தானும் ஒரு "சாமி"தான் அங்கு வெளியில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரனுக்கு !!

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

ஏகாம்பரம்!!

ஒவ்வொரு மரண வீட்டிலும் எங்கிருந்தோ ஒரு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் வந்து விடுகிறார் !

நண்பன் !!

முன் பின் தெரியாத ஒருவர் மயக்கமுறும்பொழுது அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, கொஞ்சம் தண்ணி குடிங்க என்று நீ கொடுப்பாயானால் நீ தான் மனிதன். நொந்து நூலாகி, அந்து அவலாகி வரும் ஒருவனிடம், வா மச்சி தண்ணி அடிக்கலாம்னு கூப்பிட்டாயானால் நீதாண்டா நண்பன். நான் நண்பன் நீ மனுஷனா???