செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

அ முதல் ஓ வரை

அன்று ஒரு நாள் என் வாழ்வில்
ஆதவன் போன்று வந்தவள்
இன்று ஏதோ அழுகிய பழத்தில் மொய்க்கும்
ஈ யை போல பார்த்து செல்கிறாள்
உணர்வையே புரிந்து கொள்ளாதவள் என் மனதின்
ஊனத்தையா புரிந்து கொள்வாள் ?
என்றாவது மீண்டும் சேர்வோம் என்று
ஏங்கி தவிக்கிறேன். மாலை மணி
ஐந்து ஆகும்போதெல்லாம் உனக்காக காத்திருந்த நேரம் நினைவுக்கு வரும்
ஒரு முறை ஒரே முறை எனை பற்றி யோசிப்பாளா? அந்த
ஓரவஞ்சனைகாரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக