வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

பிரிவு

என் தாயின் மறைவிற்கு பிறகு
நான் அதிகமாய் அழுதது உன்
பிரிவிற்காக மட்டுமே !

வியாழன், 17 பிப்ரவரி, 2011

என் காதல்

என்னுள் நீ,
உன்னுள் நான்,
நம்மில் நம் காதல்
இருப்பினும் வெளிப்படுத்த வார்த்தைகள் வரவில்லை
உயிர் பிரியும் நேரத்திலும்
ஓ வென ஓலமிட முடியாமல் மரித்துபோகும் அவலம் போன்றே!!

காதல்

மரணத்தை தள்ளி போடலாம் தவிர்க்க முடியாது
காதலை தவிர்க்கலாம் தள்ளி போட முடியாது

மனம்

யார் யாரோ கல் எறிந்த போதும் வலிக்கவில்லையடி
ஆனால்,
நீ ஒரு சொல் எறிந்த போது மனம் பட்டுப்போனதடி!!

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

அவள்...

கிளியோபாட்ராவும் தோற்றாலடி உன் முன்,அழகில்.
கிளியோபாட்ராவும் தோற்றாலடி உன் முன்னழகில் !!

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

சிரிப்பொலி

காதலியிடம் இருந்து வரும்
செல் போன் சிணுங்கல்கள் கூட
என் செல்ல கண்மணியின் சிரிப்பொலியாகவே கேட்கிறது.

வியாழன், 10 பிப்ரவரி, 2011

மரணித்து போகிறேன்!!

மரணிக்கும் வேளையிலும் மனதிற்குள் உன் நினைவு,
மனதிற்குள் உன் நினைவு அதனாலேயே மரணித்து போகிறேன் !!

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

அ முதல் ஓ வரை

அன்று ஒரு நாள் என் வாழ்வில்
ஆதவன் போன்று வந்தவள்
இன்று ஏதோ அழுகிய பழத்தில் மொய்க்கும்
ஈ யை போல பார்த்து செல்கிறாள்
உணர்வையே புரிந்து கொள்ளாதவள் என் மனதின்
ஊனத்தையா புரிந்து கொள்வாள் ?
என்றாவது மீண்டும் சேர்வோம் என்று
ஏங்கி தவிக்கிறேன். மாலை மணி
ஐந்து ஆகும்போதெல்லாம் உனக்காக காத்திருந்த நேரம் நினைவுக்கு வரும்
ஒரு முறை ஒரே முறை எனை பற்றி யோசிப்பாளா? அந்த
ஓரவஞ்சனைகாரி.