செவ்வாய், 21 ஜூலை, 2015
மதம்
யானைக்கு கூட பிடிக்கக்கூடாது
என்று எண்ணுபவன் நான்,
அப்படியிருக்க மனிதனுக்கு மட்டும்
பிடிக்க எண்ணி விடுவேனா?
மன்னிப்பு !
தப்புக்கு மேல் தப்பு செய்துவிட்டு ,
கடவுளிடம் கை கூப்பி மன்னிப்பு கேட்டால் ,
கடவுள் அவர்களை மன்னிப்பாரெனில் ,
தவறு செய்தவரை அல்ல, அவர்களை மன்னிக்கும் கடவுளை தான்
"கட்டி போட்டு அடிக்க வேண்டும்".
கடவுள் எனும் பூச்சாண்டி !!
நம்மில் பெரும்பாலானோர்
கடவுளை கேடயமாகவும் , பூசாண்டியகவுமே
பயன் படுத்துகிறோம்!
படையலிட்ட உணவை எச்சில் செய்தால்
சாமி கண்ணை குத்தி விடும் எனத்துவங்கி
இந்த வாசகத்தை 15 பிரதி எடுத்து
வினியோகம் செய்யாவிடில்
ரத்தம் கக்கி சாவாய் என்பது வரை !!
வியாழன், 16 ஜூலை, 2015
கண்கள் !
கண்களில் மீன் வைத்தவளை கண்டதுண்டு, வாள் வைத்தவளை இன்றுதான் கண்டுகொண்டேன்.
கண்கள் எனும் கூர் வாளால் என்னை கொன்று விடாதே என் கண்ணம்மா !!
சனி, 4 ஜூலை, 2015
தமிழ் !!
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊரில் "இருக்கின்றது ஐயா" என்று சொன்ன வார்த்தையை சென்னைவாசி "கீது பா " என்று மூன்றே எழுத்தில் முடித்து விட்டான் .
என் முன்னோர்கள் சொன்னது பொய்த்து போகுமா என்ன? "தமிழ் இனி மெல்ல சாகும்"
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)