செவ்வாய், 15 டிசம்பர், 2015

இரும்பு இதயம் !!

இரும்பில் இதயம் படைத்த எந்திரனுக்கும் காதல் முளைக்கிறது காதலிக்கும் பெண்கள் அனைவருக்கும் ஏனோ இதயம் இரும்பாகவே இருக்கிறது ?

செவ்வாய், 21 ஜூலை, 2015

மதம்

யானைக்கு கூட பிடிக்கக்கூடாது என்று எண்ணுபவன் நான், அப்படியிருக்க மனிதனுக்கு மட்டும் பிடிக்க எண்ணி விடுவேனா?

மன்னிப்பு !

தப்புக்கு மேல் தப்பு செய்துவிட்டு , கடவுளிடம் கை கூப்பி மன்னிப்பு கேட்டால் , கடவுள் அவர்களை மன்னிப்பாரெனில் , தவறு செய்தவரை அல்ல, அவர்களை மன்னிக்கும் கடவுளை தான் "கட்டி போட்டு அடிக்க வேண்டும்".

கடவுள் எனும் பூச்சாண்டி !!

நம்மில் பெரும்பாலானோர் கடவுளை கேடயமாகவும் , பூசாண்டியகவுமே பயன் படுத்துகிறோம்! படையலிட்ட உணவை எச்சில் செய்தால் சாமி கண்ணை குத்தி விடும் எனத்துவங்கி இந்த வாசகத்தை 15 பிரதி எடுத்து வினியோகம் செய்யாவிடில் ரத்தம் கக்கி சாவாய் என்பது வரை !!

வியாழன், 16 ஜூலை, 2015

அல்லாவின் வாயிலாக எல்லோரும் இன்புற்றிருக்க வேறு ஒன்றும் கேட்கவில்லை பராபரமே - ஆமென் !

கண்கள் !

கண்களில் மீன் வைத்தவளை கண்டதுண்டு, வாள் வைத்தவளை இன்றுதான் கண்டுகொண்டேன். கண்கள் எனும் கூர் வாளால் என்னை கொன்று விடாதே என் கண்ணம்மா !!

சனி, 4 ஜூலை, 2015

தமிழ் !!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊரில் "இருக்கின்றது ஐயா" என்று சொன்ன வார்த்தையை சென்னைவாசி "கீது பா " என்று மூன்றே எழுத்தில் முடித்து விட்டான் . என் முன்னோர்கள் சொன்னது பொய்த்து போகுமா என்ன? "தமிழ் இனி மெல்ல சாகும்"

செவ்வாய், 30 ஜூன், 2015

அவள் !

கண்ணுக்குள் மீன்களை வைத்துக்கொண்டு, பார்பவனை வருத்தெடுக்கிறாயே !!

சனி, 20 ஜூன், 2015

டீடைலு !!

ஒரு பொருளை தொலைச்சிட்டேனு சொன்னா, அப்படியா மச்சான் பத்திரமா இருக்க கூடாதா? அப்படின்னு கேக்கணும். ஆனா நம்ம ஆளுங்க கேக்குறான் பார், எங்க மச்சான் தொலைச்சென்னு? மவனே, எங்க தொலைச்சென்னு தெரிஞ்சா போய் எடுத்துக்க மாட்டேனா? // நல்லா கேக்குரைங்கயா டீடைலு .