வியாழன், 10 மே, 2012
வணிகம் செய்ய வந்து,
கொஞ்சம் கொஞ்சமாக,
இந்திய நாட்டை வளைத்து பிடித்த ஆங்கிலேயனை போல,
மனதில் எங்கோ ஓர் மூலையில்
சிறு புள்ளியாய், சிறு துரும்பாய் இருந்த
கவலைகள், மெல்ல மெல்ல முன்னேறி
முழு மனதையும் ஆக்கிரமித்து விட்டது.
இதயம் பாரமாக
கால்கள் துவள
கண்கள் சோர்ந்து
மூளை தவறான முடிவு எடுக்க சொல்லி மிரட்டுகிறது.
வாழ்வா ? சாவா ? எனும் மரணப்போராட்டதின் இடையே சிக்கித்தவிக்கும்
நான்........
இறைவா, எது சரி என்று படுகிறதோ அதையே
நீர் செய்யும்..............
செவ்வாய், 8 மே, 2012
மதுபான கடை
ஐயர், அய்யங்கார், செட்டியார், முதலியார், வன்னியர், பள்ளர், பறையர் என அனைத்து சாதியினரும் பாகுபாடின்றி கூடும் மதுபான கடை உண்மையில் சமரசம் உலாவும் இடமே !
பணம்
பணம் பணம் பணம்
பணம் மட்டுமே வாழ்க்கை ஆகிப்போனது.
உடன் பிறந்தவன்,
உற்ற நண்பன்,
கட்டி அணைத்த காதலி,
கை பிடித்த மனைவி,
வளர்த்த தந்தை,
வந்து போன சொந்தம்,
இது எல்லாம் பாசம் பார்த்து வந்தது
இன்று பணம் இல்லாமல் விட்டு சென்றது.
Seriously saying AMMA I MISS U A LOT.
திங்கள், 7 மே, 2012
6தீ !!
துறு துறு பார்வை,
பட பட பேச்சு,
விறு விறு நடை,
சிறு சிறு இடை,
உள்ளத்தில் எல்லாம் புண் பட்ட காயம்,
ஆயினும் உதட்டில் என்றும் ஒரு புன்சிரிப்பு,
இதுதான் என் தோழி ஆர்த்தி !
மாற்றம்
இரட்டை சடை இன்று pony tail ஆகிவிட்டது,
பாவாடை சட்டை மைக்ரோ மிடியும், ஜீன்ஸ் பான்ட்டுமாக மாறிவிட்டன
தொலை தூர உறவுகள் இன்று தொலைந்து போன உறவுகள் ஆகிவிட்டன.
எது எப்படி மாறினாலும் அன்பே ! உன் அன்பும், நட்பும், காதலும் இன்னமும் அப்படியே தான் உள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)