செவ்வாய், 26 அக்டோபர், 2010

ஏழ்மை

நேற்று என்னுடைய நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்தித்தேன் பேச்சு வாக்கில் அவர் சொன்னார் தான் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதாய். நான் சற்றே அதிர்ந்து போனேன், ஏனனில் அவர் மிகவும் செல்வாக்கு உள்ளவர். பிறகு சொன்னார் அவருடன் பணி புரியும் சக தோழர்கள் அவரை விடவும் அதிகமாக சம்பாதிப்பதாகவும் தனக்கு குறைவாக உள்ளதாகவும். அவருக்கு ஒரு கோடி மதிப்புள்ள ஒரு வீடு உண்டு, வங்கி கணக்கில் எப்பொழுதும் பணம் இருந்து கொண்டே இருக்கும். இப்படி இருந்தும் அவர் ஏழ்மை என்கிறார். நான் என்றைக்கும் யாரையும் ஒப்பிட்டு பார்பதில்லை என்ற கொள்கை உடையவன். அன்று என்னை நானே ஒரு சிறிய ஒப்பீடு செய்தேன்.
அதிகமில்லை ஒரு 15 வருடங்களுக்கு முன்பு ஒரு வேலை உணவு கூட உண்ண வழி இல்லாமல், உடுத்த நல்ல உடை இல்லாமல், உறங்க இடம் இல்லாமல் தவித்த காலம் அது. கல்லூரி படிப்பை முடித்து மேல் படிப்பு படிக்க வழி இல்லை என்று நான் அழுத காலம் அது. நிச்சயம் செய்த மாமன் மகள் என்னை வெறுத்தொருக்கி, சொந்தங்கள் எல்லாம் ஏளன படுத்தி, மனதால் நொறுங்கி இருந்த காலம். அன்று எனக்கு என்னவெல்லாம் கிடைக்கவில்லையோ இன்று சற்று அதிகமாகவே கிடைத்துள்ளது. ஆம், இன்று எனக்கு மட்டும் இல்லாமல் பசி என்று வருபவர்க்கு என்னால் உணவளிக்க முடிகிறது, நல்ல உடை அணிகிறேன், நல்ல வீடு உள்ளது , அழகான மனைவி அறிவான பிள்ளைகள், கை நிறைய என்று சொல்வதை விட மனம் நிறைந்த சம்பளம் வேறென்ன குறை எனக்கு. திருமணம் முடிந்து சில வருடங்கள் என் மனைவிக்கு பிள்ளை பேறு தள்ளி சென்றது அதற்கு பிறகு அதை ஈடு செய்யும் வகையில் இரட்டை பிள்ளைகள் பிறந்தன. நான் கேட்பதை விட எனக்கு எல்லாமே அதிகமாகத்தான் கிடைத்து வருகிறது. இது தானே ஒரு மனிதனுக்கு தேவை. கார், பங்களா எல்லாம் வாழ்கையில் ஆடம்பரம் தானே தவிர அதுவே ஆதாரம் இல்லை. இவை அனைத்தையும் யோசித்து பார்க்கும்பொழுது என் நண்பர் உண்மையில் ஏழ்மை நிலையில் தான் உள்ளார். இனி நீங்கள் யோசித்து பாருங்கள் நீங்கள் ஏழ்மையில் தவிக்கிறீர்களா இல்லை செல்வ செழிப்போடு உள்ளீர்களா என்று. நன்றி !!

திங்கள், 25 அக்டோபர், 2010

எங்க ஏரியா உள்ள வராதே !!

தலைப்பில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளை நம்மில் பலர் கேட்டு இருக்க கூடும்.
அதுவும் குறிப்பாக சென்னைவாசிகளில் பலர் கண்டிப்பாக கேட்டு இருப்பார்கள்.
இதற்கு உண்மையிலேயே என்னதான் அர்த்தம் என்று யோசித்து பார்த்தால், ஒருவரை அவர் வசிக்கும் பகுதியிலேயே வேறு ஒரு புதிய மனிதர் சண்டை போட்டாலோ இல்லை தான் அவனை விட பெரியவர் என்று காட்டிகொண்டாலோ இந்த வார்த்தையை நாம் கேட்கலாம். உண்மையை சொல்லப்போனால் இந்த வார்த்தையை சொல்லுபவர்கள் வெட்கப்பட வேண்டும் ஏன் என்றால் இவ்வார்த்தைக்கு அர்த்தம் பார்த்தால், இது எங்க ஏரியா இங்க என்னை எதுவும் செய்ய முடியாது என்னிடம் வாய்ச்சண்டையோ, கைச்சண்டையோ போட்டால் என்னால் உன்னை எதிர்த்து போராட முடியவில்லை என்றாலும் நான் வசிக்கும் இடத்தை சேர்ந்தவர்கள் ஒரு கூட்டமாகவே வந்து எனக்கு துணையாக உன்னிடம் சண்டை போடுவார்கள் என்று தானே அர்த்தம். அப்படி என்றால் இந்த வார்த்தை சொல்பவன் ஒரு கோழை தானே. உண்மையில் ஒருவன் உங்க ஏரியா உள்ளேயே வந்து உன்கிட்ட எதிர்த்து நிக்குறான் அப்படீனா அவன் தான் வீரன். என்ன சொல்லுறீங்க ????

செவ்வாய், 12 அக்டோபர், 2010

பிரிவு

நீ பிரிந்து செல்கிறாய்
இது நிரந்தர பிரிவு அல்ல
என்று தெரிந்தும்
என்னால் நிலைகொள்ள முடியவில்லை
இன்னும் இரண்டு நாட்கள்
என்று நினைக்கும்பொழுது
என் இரு கண்களை மூட முடியவில்லை
இருதயம் தன் சக்தியை மீறி துடிக்கிறது.
மரணத்தேதியை எதிர்பார்த்து காத்திருக்கும்
தூக்கு தண்டனை கைதியை போல் ஒரு உணர்வு.
இது காதல் அல்ல , காமம் அல்ல அப்படியெனில்
இதற்கு பெயர் தான் நட்பா?
இதுதான் நட்பென்றால் இனி எனக்கு அது வேண்டாம்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால்
சத்தியமாக என்னால் முடியவில்லை.
எதாவது ஒரு அற்புதம் நடந்து
இவர்கள் இங்கேயே இருந்துவிட கூடாதா
என்று என் மனம் ஏங்குகிறது.
சந்தோஷம், துக்கம், கோவம்,
வெறுப்பு என அனைத்தையும்
ஒன்றாக பகிர்ந்த நீங்கள்
பிரிவை மட்டும் எனக்கு கொடுத்துவிட்டு
செல்வது எந்த விதத்தில் நியாயம் ????

வெள்ளி, 8 அக்டோபர், 2010

இந்திரன்

துப்பாக்கியை தூக்கி போட்டு விட்டு
துப்பட்டாவை தூக்குங்கள்
துப்பட்டாவை மட்டுமே !!

புதன், 6 அக்டோபர், 2010

ஆர்த்தி

ஆர்த்தி
இவள் பெயரில் மட்டுமே தீ
இவள் பேச்சில் இருக்காது
என் உயிர் தோழி
கட கட வென பேசும்
ஒரு கபடம் இல்லா பெண்.
சில நேரங்களில் தோன்றும்,
இவளே ஒரு குழந்தை
இவளுக்கு ஒரு குழந்தையா என்று .
என்னை நல் வழி படுத்த
முயற்சிக்கும் ஒரு மூதாட்டி.
இவள் ஆசை பட்டதை அடைந்தவள்
ஆனால், அந்த ஆசையினாலேயே
பல ஆசாபாசங்களை இழந்தவள்
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால்
இவளை என்னுடைய மகளாய் பார்க்க ஆசை.

ப்ரியம்

பிரியத்தின் அருமை அது
பிரியும் போதுதான்
புரியும்