திங்கள், 5 டிசம்பர், 2016

இறைவிக்கு ஓர் இரங்கற்பா!

தலைமாட்டில் அமர்ந்தழுக மகள் அல்ல,
தலைமகளே உனக்கு தமிழகமே அழுகிறதம்மா !

நீ வீற்றிருந்த மேடையிலே காலில் விழுந்தவர்கள்
இன்று , உன் கண்ணாடி பேழையின் காலடியிலேயே கண்ணீரோடு அமர்ந்திருக்கிறார்கள் அம்மா.

காற்று வாங்க மெரீனா கடற்கரை செல்பவர்கள் மத்தியில்,
அம்மா,
உன் சுவாசக்காற்று நின்றதால் கடற்கரை செல்கிறாயோ ?

இரும்பு பெண்மணியே உன் இறப்பு எத்துணை இரும்பு நெஞ்சங்களை உருக்கிவிட்டது தெரியுமா ??

உங்களை பிரமித்து வியந்து பார்க்கும் பல கோடி ஆட்களில் நானும் ஒருவன்.- மார்டின் டெக்ஸ்டர் !

திங்கள், 9 மே, 2016

அவள் !

இதயம் கிழித்து சென்று விட்டாள் வெளியே , இனி எந்நாளும் தீராது அதன் வலியே. இனி எப்போதும் என் வாழ்க்கை தனியே , உனை நினைக்கையில் கண்களில் வழிகிறது பனியே !

புதன், 13 ஏப்ரல், 2016

IPL

மாடுகளை கொன்றிருந்தால் பாஜக கண்டித்திருக்கும் இந்தியாவே கொந்தளித்திருக்கும் 10 மான்களை கொன்றிருந்தால் கொன்றவர்களுக்கு ஆயுள்தண்டனை கிடைத்திருக்கும் 5 யானைகளை கொன்றிருந்தால் வன்மையாக தண்டிக்கபடுவார்கள் 2 புலிகளை கொன்றிருந்தால் இரட்டை ஆயுள் கிடைத்திருக்கும் ஆனால் கொல்லபட்டது பாவப்பட்ட மனிதன் அதுவம் கேட்கவே நாதியற்ற தமிழன்... எவன் கேட்கபோகிறான் என்ற அதிகார திமிர் 20 உயிர்களை திட்டமிட்டு கொலை செய்துள்ளது விலங்குகளை கொடுமை படுத்தினாலே கொதித்து எழுகிற விலங்கியல் ஆர்வலர்கள் , சல்லிகட்டுக்கு தடை வாங்கிய மனிதநேய மாந்தர்கள் மாட்டு கறியை உண்ண கூடாது என பேசுகிற புனிதர்கள் மனித உயிர் பலிக்கு என்ன சொல்ல போகிறார்கள்... 150000 பேர் படுகொலையையே காக்க தவறியவர்கள் கொலைகாரனுக்கு சிகப்பு கம்பளம் விரித்த தேசமா 20 உயிருக்கு வருத்தபடபோகிறது.... நமக்கு ipl தான் முக்கியமாக தெரிகிறது😡😡😡😡😡