புதன், 25 ஏப்ரல், 2012

அழகு!!

பெண்களின் கண்கள் அழகென்றால், அந்த கண்களால் பேசும் பெண்கள் மிக அழகு!!

அம்மா

ஒரு வரி கவிதை மகேஸ்"வரி"

நன்மை

எது நடந்தாலும் அது நன்மைக்கே எனும் மனப்பான்மை கொண்டவர்கள் கூட, கலங்கிதான் போகிறார்கள். அவர்கள் வீட்டில் ஒரு மரணம் சம்பவிக்கும்ப்பொழுது அதுவும் ஒரு துர்மரணம் ஏற்படும்பொழுது இதுவும் நன்மைக்கே என்று ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கத்தான் செய்கிறது.

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

வாழும் காலம் கொஞ்சமே

வாழும் காலம் கொஞ்சமே,
அதை
வாழ்ந்துதான் பார்ப்போமே இன்பமாய் !

குழிக்குள் செல்லும் வரை
பழி எதற்கு?
விழி திறப்போம், வழி பிறக்கும் !!

கடற்கரையில் கரைத்த பின்பு,
கல்லறையில் படுத்த பின்பு,
யாரிடம் பேசிவிட போகிறாய் அன்பாக ?

இருக்கும் வரை இன்பம் என்ன ?
இறக்கும் வரை இன்புற்றி இருப்போம்
இறந்தும் இறவா புகழ் பெறுவோம்

வாழும் காலம் கொஞ்சமே,
அதை
வாழ்ந்துதான் பார்ப்போமே இன்பமாய் !

கர்ப்பம்

10 மாதம் சுமந்து கர்ப்பம் தரிப்பது பெண்களுக்கு மறு ஜென்மம் என்றால்,
பல மாதங்கள் காதலை சொல்லாமல் மனதுக்குள் வைத்து பின் சொல்லப்போகும் தருணம் எங்களுக்கு மறு ஜென்மம் !!