திங்கள், 31 டிசம்பர், 2012
3
மனிதர்களை நான் 3 வகையாக பார்க்கிறேன். கல், களிமண் மற்றும் தண்ணீராக.
கல் மனிதர்கள் தாம் சொல்வது மற்றும் செய்வதே சரி என வாழ்பவர்கள். இவரை போன்ற மனிதர்களை தண்ணீர் அல்ல யாருடைய கண்ணீராலும் கூட கரைக்க முடியாது. கல்லை போன்றே பூமிக்கு பாரமாய் வாய்த்தவர்கள்.
களிமண் மனிதர்கள், இவர்களை நம் இஷ்டத்திற்கு பிசைந்து நமக்கு தேவையானவற்றை உருவாக்கி கொள்ளலாம். சுய புத்தி இல்லாமல் செயல் படும் மனிதர்கள்.
தண்ணீர் மனிதர்கள். தண்ணீருக்கு நிறம் கிடையாது, அதை எந்த பாத்திரத்தில் ஊற்றுகிறோமோ அதே வடிவத்திற்கு அது மாறிவிடும். நின்றால் குளம், ஓடினால் நதி, சீறினால் கடல். எந்த உரு எடுத்தாலும் மற்றவர்க்கு நன்மையே பயக்கும். இது போன்றே சில மனிதர்களும் உண்டு.
இதில் நான் யார் என்பது எனக்கு தெரியும், நீ யார் என்பதை நீயே தேர்ந்தேடுத்துகொள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)